மேலும் அறிய

Lockup Death: சேலம் மத்திய சிறையில் கைதி மரணம்... உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கை, கால் மற்றும் முகங்களில் பல காயங்கள் இருந்தது. எனவே அடித்து துன்புறுத்தி காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தெய்வசிகாமணி. இவர் மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 8 ஆம் தேதி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிறையில் நேற்று இரவு தெய்வசிகாமணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டது. உடனடியாக, காவல்துறையினர் தெய்வசிகாமணியின் குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்த நிலையில், தெய்வசிகாமணியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதால் சிறையில் அடித்து துன்புறுத்தி இருக்கலாம். அதனால் அவர் இறந்திருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் சடலத்தை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மது விற்பனை செய்வதை விட்டு விட்ட நிலையில் காவல்துறையினர் மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விற்பனை செய்ய அறிவுறுத்தியதாகவும், அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். இதற்கு உரிய நீதிமன்ற விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Lockup Death: சேலம் மத்திய சிறையில் கைதி மரணம்... உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பின்னர், தெய்வசிகாமணியின் மகன் தீபக் குமார் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த எட்டாம் தேதி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் இரண்டு காவலர்கள் தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி, சேலம் அரசு‌ மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறினர். இங்கே வந்து பார்த்தபோது தந்தை தெய்வசிகாமணி இறந்து பிணவறையில் இருந்தார். கை, கால் மற்றும் முகங்களில் பல காயங்கள் இருந்தது. எனவே அடித்து துன்புறுத்தி காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே எனது தந்தையை அடித்து கொன்ற காவலர்கள் மீது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தெய்வசிகாமணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget