மேலும் அறிய

"அடுத்துவரும் பாஜக ஆட்சியில் ராமராஜ்யம் அமைக்கப்படும்.. இது மகாத்மா காந்தியின் கனவு" - அண்ணாமலை பேச்சு..

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் அடுத்த சில வருடங்களில் 5ஜி, 6ஜி தொழில்நுட்பம் வந்து விடும்.

சேலம் மாவட்டம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற விவசாயிகளின் மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இறுதி நாளான இன்று நிறைவு விழாவில் தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியது, ”விவசாயிகளை மையப்படுத்தி 40 திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் 2 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். பிரதமரின் கிஸான் நிதி தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆன்லைன் முறையில் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு விவசாயிகளின் மீதான ஆர்வம் இதனால் வந்துள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ரூ.10 லட்சம் வழங்கி ஊக்கப்படுத்தியதால் நீரா போன்ற பானங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய அளவில் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன.

விவசாயிகளை வெறும் வாக்கு வங்கிகளாக கருதியவர்கள் மத்தியில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற சிந்தனையை பிரதமர் மோடி உருவாக்கினார். கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்காமல் அவர்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்பினை பிரதமர் உருவாக்கினார்.

2016-ம் ஆண்டு நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1310 இருந்தது.தற்போது ஒரு குவிண்டாலுக்கு ரூ.2040 வழங்கப்படுகிறது. 56 சதவீதம் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் கிரடிட் கார்டு மூலம் வருடத்திற்கு 3 சதவீத வட்டிக்கு விவசாயிகளுக்கு கடன் கிடைக்கிறது. 83 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கிசான் கிரடிட் கார்டு மூலம் கடன் பெற்று பயனடைந்து வருகின்றனர். அவினாசி-அத்திகடவு திட்டம் மத்திய அரசின் ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்புடன் தொடங்கி நடைபெற்று 96 சதவீதம் பணிகள் முடிவுற்று விட்டது. ஆனால் கடந்த 15 மாதங்களாக திமுக ஆட்சியில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பைப் போட முடியாமல் திட்டம் அப்படியே நிற்கிறது. மாவட்டந்தோறும் முக்கிய விளைபொருட்களை விற்பனை சந்தைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கு ஒரு விவசாயப் பொருள் விற்பனையாகி வருகிறது. விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய விவசாயிகளில் 8 ஆண்டுகளாக பட்டினிச் சாவு இல்லை.இந்தியாவின் விவசாய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார். ஒவ்வொரு தாலுகா, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குளிர்பதனக் கிடங்கு இதன் மூலம் உருவாக்கப்படும். மேலும், ரயில்வே கிடங்கு, துறைமுகங்களில் பெரிய அளவிலான கிடங்குகள் உருவாக்கப்பட உள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்திய சந்தைகளுக்கு வரும் கலிபோர்னியா ஆப்பிள் போல, மத்திய பிரதேசம் மற்றும் காஷ்மீரில் இருந்து அதே தரத்தில் பழங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

முந்தைய அரசுகள் சரியாக திட்டமிடாத நிலையில், வெளிநாட்டுப் பொருள்கள் இந்திய உணவுச் சந்தையை ஆக்கிரமித்து வருகிறது. அந்த நிலையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. பெருங்காயம் இஸ்ரேலில் இருந்து ரூ.ஆயிரம் கோடி இறக்குமதி செய்து வந்த நிலை மாறியுள்ளது. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்தது போல யாரும் செய்தது இல்லை. இயற்கை விவசாயம் இந்தியாவில் தொடங்கி விட்டது. சிக்கிமில் 100 சதவீதம் இயற்கை விவசாயம் உள்ளது.

இந்திய அளவில் 15 மாநிலங்கள் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் உள்ளது. இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பி உள்ளோம். விவசாயிகளின் தீர்மானங்களை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். நம்முடைய விவசாயப் பொருட்கள் மீது நாட்டமில்லாமல் உள்ளனர். இதை மாற்றியமைக்க உள்ளூரை நோக்கிச் செல்வோம் என்ற திட்டத்தை பிரதமர் முன்னெடுத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் அடுத்த சில வருடங்களில் 5ஜி, 6ஜி தொழில்நுட்பம் வந்து விடும். நகரங்களுக்கு இணையான அனைத்து வசதிகளும் கிராமங்களில் வந்து விடும் போது, நகரங்களுக்கு இடம்பெயர்வது தடுக்கப்படும். பிஎஸ்.என்எல் நிறுவனத்திற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் பாஜக ஆட்சியில் ராமராஜ்யம் அமைக்கப்படும். இது மகாத்மா காந்தியின் கனவு. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்கிற ராமராஜ்யத்தினை மத்தியிலும் மாநிலத்திலும் அமைப்போம். உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும்போது விவசாயம் வளர்ச்சி அடையும்” என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget