மேலும் அறிய

பஹல்காம் தாக்குதல் எதிரொலி; ஏற்காடு, மேட்டூர் அணைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின் பேரில், 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, 28 சுற்றுலாப்பயணிகளை கொடூரமாக கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின் பேரில், 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் ஆத்தூர் டவுன், புதுப்பேட்டை, தம்மம்பட்டி பஜார் தெரு, கெங்கவல்லி டவுன், வாழப்பாடி, பேளூர், ஓமலூர், இடைப்பாடி பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் பற்றி கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல், மாவட்டத்தின் முக்கிய இடங்களான மேட்டூர் அணை, மேட்டூர் அனல் மின்நிலையம், செக்கானூர் தடுப்பணை, சேலம் காமலாபுரம் விமான நிலையம், கே.ஆர். தோப்பூர் மின்பகிர்வு அலுவலகம், ஏற்காடு சுற்றுலாத்தலம் ஆகிய இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான போலீஸ் பாதுகாப்புடன் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி; ஏற்காடு, மேட்டூர் அணைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் தீவிரமாக சோதனையிட்டு, அனுப்பி வருகின்றனர். மேலும், ஏற்காட்டில் அண்ணா பூங்கா, ஏரிக்கரை, ரோஜா தோட்டம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கின்றனர். இந்த கண்காணிப்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, முக்கிய ரயில் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகத்தில் சென்னை, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீசார் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் ஏறி சோதனையும் நடத்தி வருகின்றனர். சேலம் ஜங்ஷனில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில் குமார் தலைமையிலான போலீசார், பிளாட்பாரங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து, கோவை எக்ஸ்பிரஸ், மும்பை சென்ற குர்லா எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏறி மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். வட மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்கலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget