“ராஜாவாக இருந்தாலும், கூலியாக இருந்தாலும் ஒரு டம்ளர் சாம்பல்தான்” - நாமக்கல் ஆட்சியர் உமா
திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பம்பட்டி பகுதியில் திருநங்கைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி இலவச வீட்டு மனை பட்டாவானது வழங்கப்பட்டது. அங்கு உள்ள கிராம மக்கள் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கோப்பம்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, கிராம மக்களிடம் மற்றும் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் அரசு நிலம் என்பது சமம் தான் யாரிடம் கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது என கூறினார். யாருக்கு வீட்டு மனை பட்டா வேண்டும் என்றாலும் உரிய ஆவணத்துடன் அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள். மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் அரசாங்கமும், அதிகாரிகளும் உள்ளனர். கிராமத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக மனு அளியுங்கள் உங்களுக்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று கிராம மக்களிடையே உறுதியளித்தார்.
அதனை தொடர்ந்து ராஜாவாக இருந்தாலும், கூலியாக இருந்தாலும் மயானத்திற்கு சென்றால் ஒரு டம்ளர் சாம்பல் தான். மக்களிடையே கருத்து வேறுபாடு இருக்கக் கூடாது. அனைவருக்கும் ஓடுவது சிவப்பு ரத்தம் தான் விழும்பில் இருக்கும் திருநங்கைகளை நம் தான் வாழ்வில் உயர்த்துவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கிராம மக்களிடையே பேசினார்.





















