மேலும் அறிய

10 ஆண்டுகளுக்கு பிறகு நாகாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தர்மபுரி மக்கள் மகிழ்ச்சி

’’9 கி.மீ தொலைவு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், அரகாசனஅள்ளி பத்துக்கும் மேற்பட்ட  கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்’’

தருமபுரி மாவட்டத்தில், நேற்று மாலை ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதே போல் பென்னாகரம் அடுத்துள்ள நாகர்கூடல், ஏலகிரி, நாகாவதி அணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு விடிய விடிய தொடர் மழை பெய்து. இசனால்  நாகாவதி ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நாகாவதி ஆற்றில்  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக  ஆற்றில், சுமார்  9 கிலோ மீட்டர் தொலைவு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், அரகாசனஅள்ளி, ஆர்.ஆர்.ஹள்ளி, பூதநாயக்கன்பட்டி, சின்னம்பள்ளி, பெரும்பாலை சோளிகவுண்டனூர், பெத்தானூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட  கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் நிலத்தடி நீரும் உயரும் என்பதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் நாகவதி அணை முழு கொள்ளளவை எட்டினால் விவசாயத்திற்காக தண்ணீா் திறந்து விடப்படும். இதனால் 22 கிலோ மீட்டர் தொலைவு வரை விவசாய பாசனத்திற்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்தால் விவசாயம் செழிக்கும். மேலும் தொடர் மழை காரணமாக கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு நாகாவதி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

10 ஆண்டுகளுக்கு பிறகு நாகாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தர்மபுரி மக்கள் மகிழ்ச்சி
 
 
 

பாப்பிரெட்டிபட்டி அடுத்த தென்கரை கோட்டை ஏரி நிரம்பியதால், உபரிநீரை பூஜை செய்து மலர் தூவி இனிப்பு வழங்கிய கிராம மக்கள் 
 
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த தென்கரை கோட்டை ஏரி சுமார் 84 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு வாணியாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் மற்றும் ஓந்தியாம்பட்டி ஏரியின் உபரிநீரின்  தண்ணீர் மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஏரி மூலம் ஜம்மணஹள்ளி ஏரி, ஆலமரத்துப்பட்டி ஏரி, நாகப்பட்டி ஏரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஏரியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.
 

10 ஆண்டுகளுக்கு பிறகு நாகாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தர்மபுரி மக்கள் மகிழ்ச்சி
 
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், வாணியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  இதனால் வினாடிக்கு 340 கனஅடி தண்ணீர், உபரி நீராக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரமாக தென்கரை கோட்டை ஏரிக்கு வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.   இதனால் தற்பொழுது ஏரி நிரம்பி கோடி எடுத்து, தண்ணீர் வெளியேறி வருகிறது. 
 
இந்நிலையில் தென்கரைகோட்டை கிராம மக்கள், ஏரி கோரிடியில் பூஜை செய்து மலர்களை தூவி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் இந்த தண்ணீர் ஜெலகண்டேஸ்வரர் கருட விஜயன் ஆற்றின் வழியாக ஆலமரத்துப்பட்டி, கொளகம்பட்டி ஆகிய ஏரிகளுக்கு செல்கிறது. கடந்த ஆண்டு  பெய்த மழையில் இதே ஆண்டில் ஜனவரி மாதம்  தென்கரைகோட்டை  ஏரி நிரம்பியது. தொடர்ந்து இந்தாண்டு இரண்டு மாதம் முன்னதாகவே ஏரி நிரம்பி உள்ளதால் விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தலைப்பு செய்திகள்

அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
Embed widget