மேலும் அறிய

பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி வேண்டும்; அடிப்படை வசதி இல்லை - குவிந்த பள்ளி மாணவர்கள், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி கேட்டு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட 50 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி படுத்துள்ள சித்தன் பட்டி கிராமம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு முறையான பேருந்து வசதி கேட்டு மனு அளித்தனர். இதுகுறித்து சித்தன் பட்டி பகுதி மக்கள் கூறுகையில், சித்தன் பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே துவக்கப்பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் கூடமலை பகுதிக்கு தான் செல்ல வேண்டும். அந்தப் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது எங்கள் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கூட மலையில் உள்ள மேல்நிலைப் பள்ளி செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்து இல்லை. பேருந்து வராததற்கு காரணம் எங்கள் கிராமப் பகுதியில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதால் பேருந்துகள் வர முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் கூடமலை பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் நடந்தே செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு தாமதம் ஏற்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு நடந்து செல்ல சிரமமாகவும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்” என்றும் தெரிவித்தனர். மேலும் எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி சாக்கடை வசதி கூட இல்லாமல் உள்ளது அதையும் மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்தனர். 

பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி கேட்டு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட 50 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி வேண்டும்; அடிப்படை வசதி இல்லை - குவிந்த பள்ளி மாணவர்கள், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

இதேபோன்று சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என பெற்றோர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். ஆனால் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் போதிய வகுப்பறை வசதி மற்றும் கழிவறை வசதி இல்லை என மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெற்றோர்கள், ”கொண்டப்பநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியில் வகுப்பறை வசதி, கழிப்பறை வசதி, துப்புரவு பணியாளர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லாத நிலை உள்ளது. இது தொடர்பாக அரசிடம் பலமுறை பெற்றோர் ஆசிரியர் கழக சார்பில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” என இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறினார். மேலும் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் உள்ளது. வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தில் வாகனங்களை வேறு வழியில் செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Embed widget