மேலும் அறிய

புத்தகங்களை படிப்பதால் குற்ற செயல்கள் குறையும் - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தமிழகத்தில் இந்த மாதம் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதல்வர் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

புத்தகங்களை படிப்பதால் குற்ற செயல்கள் குறையும் என்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தருமபுரி வள்ளலார் திடலில் ஐந்தாவது புத்தகத் திருவிழாவை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று (09.09.23) தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்ட நிர்வாகம்,  தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து தருமபுரி வள்ளலார் திடலில் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்துகிறது.

இந்த புத்தகத் திருவிழாவை தொடக்க விழா இன்று நடைபெற்றது. மாநில வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புத்தகத் திருவிழா அரங்குகளை திறந்து வைத்து, இது தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

தமிழக அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்துவதற்கு நிதி உதவி அளித்து வருகிறது. இதற்காக 8 கோடியே 45 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது.

தருமபுரியில் நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு அரசு சார்பில் ரூபாய் 20 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.  இது போன்ற அறிவு சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு உதவி புரியும் புத்தக திருவிழாக்களுக்கு உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

புத்தகங்கள் படிப்பதால் வாழ்வியல் நடைமுறைகள் மேம்பாடு அடைகிறது.  தொடர்ந்து புத்தகங்கள் படிப்பதால் நினைவாற்றல் வளர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்தவர்களாக விளங்க வழிவகை செய்கிறது.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 11,252 மாணவிகள் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் பெற்று பயனடைந்து வருகின்றனர். 

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பள்ளிகளில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


புத்தகங்களை படிப்பதால் குற்ற செயல்கள் குறையும் - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தருமபுரி மாவட்டத்தில் 1124 பள்ளிகளில் திட்டத்தின் மூலம் 44 ஆயிரம் மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நூலகங்களில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு அனைத்தும் புது பொலிவுடன் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் இந்த மாதம் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதல்வர் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார். சென்ற ஆண்டு தருமபுரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூபாய் ஒரு கோடியே 29 லட்சத்திற்கு 60,000 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த ஆண்டும் அனைத்து தரப்பினரும் தருமபுரி புத்தகத் திருவிழாவிற்கு வருகை புரிந்து புத்தகங்களை வாங்கி படித்து அறிவாற்றலை பெருக்கிக் கொள்ள வேண்டும். என்றார் அமைச்சர்.

இப்புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget