மேலும் அறிய

Cauvery Flood Warning: விரைவில் நிரம்ப உள்ள மேட்டூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

டெல்டா பாசனத்திற்காக காலை 10 மணிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், நண்பகல் 12 மணி முதல் 20 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறப்பு அதிகப்படுத்தப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியைத் தாண்டியுள்ள நிலையில், மேட்டூர் அணையையொட்டி காவிரிக் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து உபரிநீர் அதிகளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்த 27-ந் தேதி, 71 வது முறையாக எட்டியது. 

Cauvery Flood Warning: விரைவில் நிரம்ப உள்ள மேட்டூர் அணை -  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இதனிடையே நேற்று முதல் டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. எனினும் வினாடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிக்கும் மேல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை கடந்த நிலையில், இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் 120 அடியை எட்டும்போது உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்பதால் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் நகராட்சி சார்பில் உபரிநீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், தூக்கனாம்பட்டி, மாதையன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் காவிரிக் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு ஒன்றரை லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பட்டச் சான்றிழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ளுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதனிடையே டெல்டா பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 10 மணிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், நண்பகல் 12 மணி முதல் 20 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறப்பு அதிகப்படுத்தப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Cauvery Flood Warning: விரைவில் நிரம்ப உள்ள மேட்டூர் அணை -  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம். எனவே காவேரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க..  கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க.. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்
Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்
Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க..  கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க.. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்
Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்
Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
கஷ்டப்பட்டு திருடி கை உடைந்ததுதான் மிச்சம் -  திருடர்களை புலம்ப வைத்த போலீஸ் - நடந்தது என்ன?
கஷ்டப்பட்டு திருடி கை உடைந்ததுதான் மிச்சம் - திருடர்களை புலம்ப வைத்த போலீஸ் - நடந்தது என்ன?
IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு - அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் யார்? சேவாக்கை நெருங்கும் ரோஹித் ஷர்மா
IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு - அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் யார்? சேவாக்கை நெருங்கும் ரோஹித் ஷர்மா
TN Weather: தமிழ்நாட்டை சுட்டெரிக்கப்போகுது வெயில்! அடுத்த 5 நாட்கள் இப்படித்தான் இருக்கப்போகுது!
TN Weather: தமிழ்நாட்டை சுட்டெரிக்கப்போகுது வெயில்! அடுத்த 5 நாட்கள் இப்படித்தான் இருக்கப்போகுது!
Embed widget