மேலும் அறிய

மேட்டூர் அணை: 16 கண் மதகு, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஒரு லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை 42 வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் ஒரு லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். மேட்டூர் கட்டி முடிக்கப்பட்ட 89 ஆண்டு கால வரலாற்றில் 42 வது முறையாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 9.55 மணிக்கு எட்டியது. இதனையடுத்து, அதன் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையில் இடது கரையில் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் மதுசூதனன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

மேட்டூர் அணை: 16 கண் மதகு, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

இதனையடுத்து, 16 கண் பாலத்தில் உள்ள ஒவ்வொரு மதகுகளும் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனை சேலம் கேம்ப் பகுதியில் இருந்த பாலத்தில் நின்றபடி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியே எட்டி உள்ளதால் கடல் போல் காட்சி அளிக்கிறது. முதல் கட்டமாக 25 ஆயிரம் கன அடி நீர் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டது. இது படிப்படியாக ஒரு லட்சம் வரை உயர்த்தப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்படுகிறது. 

மேட்டூர் அணை: 16 கண் மதகு, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

அணை நிரம்பியதால் வரும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்பதால் காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை , தீயணைப்புத்துறை ஊரக வளர்ச்சித்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதியில் காவிரிக் கரையோரப் பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன.

 மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், கால்வாய் பாசனத்திற்காக தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி 15 நாட்கள் முன்னதாகவே இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
T20 World Cup 2026: அடுத்த டி20 உலகக் கோப்பை எங்கே நடைபெறும்? எத்தனை அணிகள் தகுதி? முழு விவரம் உள்ளே!
T20 World Cup 2026: அடுத்த டி20 உலகக் கோப்பை எங்கே நடைபெறும்? எத்தனை அணிகள் தகுதி? முழு விவரம் உள்ளே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
T20 World Cup 2026: அடுத்த டி20 உலகக் கோப்பை எங்கே நடைபெறும்? எத்தனை அணிகள் தகுதி? முழு விவரம் உள்ளே!
T20 World Cup 2026: அடுத்த டி20 உலகக் கோப்பை எங்கே நடைபெறும்? எத்தனை அணிகள் தகுதி? முழு விவரம் உள்ளே!
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget