மேலும் அறிய

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு - பாஜக குழு ஆய்வு

திமுக அரசு வந்தாலே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவம் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது.

சேலம் மாநகர் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த சம்பவத்தை கண்ட எதிர்வீட்டு நபர் தியாகராஜன் என்பவர் ராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராஜன் வீட்டிற்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் வீட்டில் நேற்று அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்றி வீட்டின் முன்பு வீசியது தொடர்பாக ஏழு பேரை அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் காதர் உசேன் மற்றும் சையத் அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு - பாஜக குழு ஆய்வு

இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு குண்டு வீசப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உத்திரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று சேலத்தில் நேற்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் வீசிய சம்பவம் குறித்து, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி மற்றும் மாநில சிறுபான்மை தலைவி டெய்ஸி ஆகியோர் ராஜன் இல்லத்தில் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு - பாஜக குழு ஆய்வு

ஆய்விற்கு பின்னர் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி செய்திகளை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழகத்தில் இருந்து வருகிறது. எந்த விரோதமும், எந்த காரணமும் இல்லாத குடும்பத்தின் மீது தாக்குதல் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், எதற்காக இந்த தாக்குதல் நடைபெற்றது என தெரிந்து கொள்வதற்காக குழு அமைத்த மாநிலத் தலைவர் சந்திக்க சொல்லியிருந்தார். அதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். தாக்குதல் நடத்தப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம். எந்த காரணத்திற்காக இந்த தாக்குதல் நடைபெற்றது என தெரியவில்லை.

அவர்களுக்கு யாரும் பகையாளி இல்லை. அமைதியாக இருந்த குடும்பத்தின் மீது என் தாக்குதல் நடத்தப்பட்டதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த ஆய்வு குறித்து பாஜக தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிப்போம் அதன்படி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றார். தமிழகம் முழுவதும் நடக்கும் தாக்குதல் எந்தவித முன் பகையும் இன்றி நடத்தப்படுகிறது. தனிப்பட்ட கோபத்தில் யார் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை. ஏதோ ஒரு காரியத்திற்காக இந்த தாக்குதலை சமூகவிரோதிகள் செய்து வருகின்றனர். திமுக அரசு வந்தாலே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவம் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. இது போன்ற சம்பவங்கள் திமுக ஆட்சியில் நடப்பது அனைவரும் அறிந்தது. அரசு அனைத்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK LIVE Score: சூறாவளியாக சுழன்ற  RCB பேட்ஸ்மேன்கள்; CSK-வுக்கு 219 ரன்கள் இலக்கு!
RCB vs CSK LIVE Score: சூறாவளியாக சுழன்ற RCB பேட்ஸ்மேன்கள்; CSK-வுக்கு 219 ரன்கள் இலக்கு!
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK LIVE Score: சூறாவளியாக சுழன்ற  RCB பேட்ஸ்மேன்கள்; CSK-வுக்கு 219 ரன்கள் இலக்கு!
RCB vs CSK LIVE Score: சூறாவளியாக சுழன்ற RCB பேட்ஸ்மேன்கள்; CSK-வுக்கு 219 ரன்கள் இலக்கு!
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
RCB vs CSK Innings Highlights: அனைவரும் அதிரடி..திணறிய CSK; 219 ரன்கள் இலக்கு!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget