மேலும் அறிய

அப்படியிருந்தால் அண்ணாமலை சொல்லுவார்.. கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்..

செம்மர கடத்தலில் ஈடுபடும் பெரிய வியாபாரிகள், அரசியல்வாதிகள், பினாமிகள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசினார்.

பாஜக அடிமை ஆட்சியில் இருந்த காவல்துறைபோல் இருந்தால், காவல்துறை செயல்பாடு நன்றாக இருக்கிறது என அண்ணாமலை சொல்லுவார் என அரூரில் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்
 
தருமபுரி மாவட்டம் அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 33-வது தருமபுரி மாவட்ட மாநாடு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரூர் பேருந்து நிலையத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்பொழுது பேசிய கே.பாலகிருஷ்ணன், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருந்தபோது இருந்த காவல்துறையை போல் இருந்தால் காவல்துறை நன்றாக திறமையாக செயல்படுகிறது என்று சொல்வார். எஸ் வி சேகர் என்ன வேண்டுமானாலும் பேசுவார், நம்ம எச்.ராஜா, நீதிபதிகளை கூட கேவலமாக திட்டுவார், பெண்களைக் கேவலப்படுத்துகிற வார்த்தைகளை கூட சொல்வார்கள். ஆனால் அப்பொழுது இருந்த காவல்துறை அதையெல்லாம் கண்டுகொள்ளாது. ஏனென்றால் அது பிஜேபியின் அடிமை ஆட்சியில் இருந்த காவல்துறை. அதே மாதிரி இந்த காவல் துறையும் இருக்க வேண்டும் என்று சொன்னால் முடியாது என்று டிஜிபி சொல்கிறார். சட்ட வரம்புகளை மீறி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று டிஜிபி சொல்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது. அதை வேண்டுமென்றால் நீதிமன்றம் சென்று சந்திக்கலாமே. அதை விடுத்து காவல் துறை செயல்படவில்லை, அவர் கையில் இல்லை என்று சொல்வது, வேறு யார் கையில் உள்ளது. ஒருவேளை காவல் துறை அண்ணாமலை கையில் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறாரோ என்று தெரியவில்லை.
 

அப்படியிருந்தால் அண்ணாமலை சொல்லுவார்.. கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்..
 
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடியது என்பது எல்லாருக்குமே தெரியும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்கள். யார் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சரிதானே அதை எப்படி பழிவாங்கும் நோக்கம் என்று சொல்ல முடியும். சோதனை நடத்தப்படுகிறது, வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதனை நீதிமன்றத்தில் சந்தித்து விடுதலையாகி வரவேண்டும். தவறு நடந்து இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும். அதற்குள்ளாக இது பழிவாங்கும் நோக்கம் என்று எப்படி சொல்ல முடியும். அப்படி  சொல்ல முடியாது.

அப்படியிருந்தால் அண்ணாமலை சொல்லுவார்.. கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்..
 
 
மத்திய அரசின் தனியார் மையமாக்கல் கொள்கையால் தான் பொட்டாஷ் விலை ஏற்றத்திற்கு காரணம். எல்லா பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டிருக்கிறது. இரும்பு, அலுமினியம், பித்தளை விலை ஏற்றம் கண்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைக்கு தேவையான பொருட்கள். இது எல்லாமே நூறு மடங்கு, இருநூறு மடங்கு, 300 மடங்கு என காப்பர் 400% விலை ஏற்றம் கண்டுள்ளது.  அதேபோல பொட்டாஷை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அரசாங்கம் இறக்குமதி செய்து விற்பனை செய்யாததால் தனியார் விற்கபடுவதால் இந்த கொள்ளை நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் தனியார் மையமாக்கல் என்ற தவிர்க்க முடியாத கொள்கைதான் பொட்டாஷ் விலை உட்பட அனைத்தும் விலை ஏற்றம் அடைவதற்கான முக்கிய காரணம்.
 

அப்படியிருந்தால் அண்ணாமலை சொல்லுவார்.. கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்..
 
தமிழகத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், இன்றைய இளைஞர்கள் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் செம்மரம் வெட்டுதல் போன்ற தொழிலுக்கு சென்று உயிரை இழந்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கு அரசு போதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் இந்த செம்மரக் கடத்தல் தொழில் செய்யும் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள் போன்ற வியாபாரிகளை கைது செய்வதை விடுத்து,  கூலி வேலைக்கு செய்பவர்களை பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்ததால், செம்மரக் கடத்தலை தடுக்க முடியாது. அடிப்படையில் செம்மர கடத்தலில் ஈடுபடும் பெரிய வியாபாரிகள், அரசியல்வாதிகள், பினாமிகள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசினார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Embed widget