மேலும் அறிய

அப்படியிருந்தால் அண்ணாமலை சொல்லுவார்.. கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்..

செம்மர கடத்தலில் ஈடுபடும் பெரிய வியாபாரிகள், அரசியல்வாதிகள், பினாமிகள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசினார்.

பாஜக அடிமை ஆட்சியில் இருந்த காவல்துறைபோல் இருந்தால், காவல்துறை செயல்பாடு நன்றாக இருக்கிறது என அண்ணாமலை சொல்லுவார் என அரூரில் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்
 
தருமபுரி மாவட்டம் அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 33-வது தருமபுரி மாவட்ட மாநாடு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரூர் பேருந்து நிலையத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்பொழுது பேசிய கே.பாலகிருஷ்ணன், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருந்தபோது இருந்த காவல்துறையை போல் இருந்தால் காவல்துறை நன்றாக திறமையாக செயல்படுகிறது என்று சொல்வார். எஸ் வி சேகர் என்ன வேண்டுமானாலும் பேசுவார், நம்ம எச்.ராஜா, நீதிபதிகளை கூட கேவலமாக திட்டுவார், பெண்களைக் கேவலப்படுத்துகிற வார்த்தைகளை கூட சொல்வார்கள். ஆனால் அப்பொழுது இருந்த காவல்துறை அதையெல்லாம் கண்டுகொள்ளாது. ஏனென்றால் அது பிஜேபியின் அடிமை ஆட்சியில் இருந்த காவல்துறை. அதே மாதிரி இந்த காவல் துறையும் இருக்க வேண்டும் என்று சொன்னால் முடியாது என்று டிஜிபி சொல்கிறார். சட்ட வரம்புகளை மீறி பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று டிஜிபி சொல்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது. அதை வேண்டுமென்றால் நீதிமன்றம் சென்று சந்திக்கலாமே. அதை விடுத்து காவல் துறை செயல்படவில்லை, அவர் கையில் இல்லை என்று சொல்வது, வேறு யார் கையில் உள்ளது. ஒருவேளை காவல் துறை அண்ணாமலை கையில் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறாரோ என்று தெரியவில்லை.
 

அப்படியிருந்தால் அண்ணாமலை சொல்லுவார்.. கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்..
 
ஏற்கனவே அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடியது என்பது எல்லாருக்குமே தெரியும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்கள். யார் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சரிதானே அதை எப்படி பழிவாங்கும் நோக்கம் என்று சொல்ல முடியும். சோதனை நடத்தப்படுகிறது, வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதனை நீதிமன்றத்தில் சந்தித்து விடுதலையாகி வரவேண்டும். தவறு நடந்து இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும். அதற்குள்ளாக இது பழிவாங்கும் நோக்கம் என்று எப்படி சொல்ல முடியும். அப்படி  சொல்ல முடியாது.

அப்படியிருந்தால் அண்ணாமலை சொல்லுவார்.. கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்..
 
 
மத்திய அரசின் தனியார் மையமாக்கல் கொள்கையால் தான் பொட்டாஷ் விலை ஏற்றத்திற்கு காரணம். எல்லா பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டிருக்கிறது. இரும்பு, அலுமினியம், பித்தளை விலை ஏற்றம் கண்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைக்கு தேவையான பொருட்கள். இது எல்லாமே நூறு மடங்கு, இருநூறு மடங்கு, 300 மடங்கு என காப்பர் 400% விலை ஏற்றம் கண்டுள்ளது.  அதேபோல பொட்டாஷை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அரசாங்கம் இறக்குமதி செய்து விற்பனை செய்யாததால் தனியார் விற்கபடுவதால் இந்த கொள்ளை நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் தனியார் மையமாக்கல் என்ற தவிர்க்க முடியாத கொள்கைதான் பொட்டாஷ் விலை உட்பட அனைத்தும் விலை ஏற்றம் அடைவதற்கான முக்கிய காரணம்.
 

அப்படியிருந்தால் அண்ணாமலை சொல்லுவார்.. கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்..
 
தமிழகத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், இன்றைய இளைஞர்கள் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் செம்மரம் வெட்டுதல் போன்ற தொழிலுக்கு சென்று உயிரை இழந்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கு அரசு போதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல் இந்த செம்மரக் கடத்தல் தொழில் செய்யும் பெரிய பெரிய கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள் போன்ற வியாபாரிகளை கைது செய்வதை விடுத்து,  கூலி வேலைக்கு செய்பவர்களை பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்ததால், செம்மரக் கடத்தலை தடுக்க முடியாது. அடிப்படையில் செம்மர கடத்தலில் ஈடுபடும் பெரிய வியாபாரிகள், அரசியல்வாதிகள், பினாமிகள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பேசினார்.

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget