மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காவிரியில் பீறிட்டு வரும் 57,000 கன அடி நீர் - ஒகேனேக்கல் அருவியை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்
’’மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் ஒகேனக்கல்லில் தேக்கமடைந்து வருவதால், பாறைகள் தெரியாமல் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது’’
![காவிரியில் பீறிட்டு வரும் 57,000 கன அடி நீர் - ஒகேனேக்கல் அருவியை மூழ்கடித்து செல்லும் வெள்ளம் Increase in water level in the Cauvery River - flooding in the Hogenakkal Falls காவிரியில் பீறிட்டு வரும் 57,000 கன அடி நீர் - ஒகேனேக்கல் அருவியை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/df1fce6f0db87a61164e67e6142fc500_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒகேனேக்கல் அருவி, தருமபுரி
தமிழக, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக மற்றும் தமிழக காவிரி கரையோரங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வந்ததால், நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்நிலையில் நேற்று வினாடிக்கு 43,000 கன அடியாக இருந்து வந்தது.
![காவிரியில் பீறிட்டு வரும் 57,000 கன அடி நீர் - ஒகேனேக்கல் அருவியை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/83001de9dc800fca5a27b148d363f8bb_original.jpg)
தொடர்ந்து நேற்று கனமழை பெய்ததால், காலை வினாடிக்கு 43,000 கன அடியிலிருந்து 45,000, 50,000 என படிப்படியக உயர்ந்தது. மேலும் நேற்று முழுவதும் தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வன பகுதிகளில் இடைவிகாமல் கன மழை பெய்துள்ளது. இதனால் இன்று காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 57,000 கன அடியாக உயர்ந்தது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளே தெரியாதவாறு வெள்ளம் பெருக்கெடுத்து, கரைபுரண்டு ஓடுகிறது.
![காவிரியில் பீறிட்டு வரும் 57,000 கன அடி நீர் - ஒகேனேக்கல் அருவியை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/19dd91f1e6e5b34116e64f4a50104508_original.jpg)
மேலும் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் ஒகேனக்கல்லில் தேக்கமடைந்து வருவதால், பாறைகள் தெரியாமல் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்களாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாக தடை விதித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றங்கரையோரம் உள்ள பகுதியில், வருவாய் பேரிடர், காவல், தீயணைப்பு மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் ஆற்றங்கரை பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள நீர் அளவிடும் பகுதியில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion