மேலும் அறிய

தருமபுரியில் வலி நிவாரணிகளை கொண்டு மாணவர்களை போதைக்கு அடிமையாக்கிய கும்பல் கைது

மதுவை விட குறைந்த விலையில் இந்த மருந்துகள் கிடைப்பதாலும், மது அருந்தினால் ஏற்படும் வாடை போன்றவை இல்லாமல் போதை போன்ற மனநிலையை நுகர முடிகிறது என்பதாலும் இளைஞர்கள் இவ்வகை ஊசிக்கு அடிமையாகி வருகின்றனர்

தருமபுரி மாவட்டத்தில் மலை பகுதிகளில் வலி நிவாரண மருந்து ஊசிகளை பயன்படுத்தி, இளைஞர் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக தருமபுரி மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  போதைப் பொருள் தடுப்பு ஆய்வாளர் சந்திரா மேரி தலைமையிலான குழுவினரும், டிஎஸ்பி வினோத் தலையில் காவல் துறையினரும் இணைந்து நல்லம்பள்ளி வட்டம் மிட்டாதின்னஅள்ளி அடுத்த மயில்கொட்டாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியைச் சேர்ந்த வஜ்ரவேல் (47) என்பவரை தேடி வரும் இளைஞர்கள் போதை ஊசி செலுத்திக் கொண்டு செல்வதாக ஆய்வில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் தொடர் விசாரணையில் தருமபுரி நகரில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் இருந்து குறிப்பிட்ட மருந்தை வாங்கி இளைஞர்களுக்கு வஜ்ரவேல் செலுத்தி வருவதாகவும், போதை தேவைக்காக இளைஞர்கள் இந்த ஊசியை செலுத்திக் கொள்ள வஜ்ரவேலுவை நாடி அதிக அளவில் வருவதாகவும் தெரிய வந்தது. 
 

தருமபுரியில் வலி நிவாரணிகளை கொண்டு மாணவர்களை போதைக்கு அடிமையாக்கிய கும்பல் கைது
 
எனவே, மெடிக்கல் கடை உரிமையாளர் சோமசுந்தரத்திடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தருமபுரியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், சாமிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருடன் இணைந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து இவ்வகை மருந்துகளை வாங்கி சோமசுந்தரத்தின் மெடிக்கல் கடைக்கு அனுப்புவதாக தெரிய வந்தது. எனவே, அவர்கள் 4 பேரையும் அதியமான்கோட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.  இதனை தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு ஆய்வாளர் சந்திரா மேரி இதுகுறித்து கூறும்போது, ‘புற்றுநோய் உள்ளிட்ட நோயாளிகளுக்கு வலி நிவாரணம் தர  ‘ட்ரெமடால்’ எனும் மருந்து ஊசியாக செலுத்தப்படும். இந்த ஊசி மூலம் வலி குறைந்து உளவியல் ரீதியாக நம்பிக்கை ஏற்படும். இந்தவகை மருந்து தருமபுரி நகரைச் சுற்றி உள்ள பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்தது. குறிப்பாக, போதைக்கு மாற்றாக இந்த மருந்து இளைஞர்களால் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. இந்த மருந்தின் தொடர் பயன்பாடு மாரடைப்பு வந்து உயிருக்கே ஆபத்தாக முடியவும் கூடும்.
 

தருமபுரியில் வலி நிவாரணிகளை கொண்டு மாணவர்களை போதைக்கு அடிமையாக்கிய கும்பல் கைது
 
மதுவை விட குறைந்த விலையில் இந்த மருந்துகள் கிடைப்பதாலும், மது அருந்தினால் ஏற்படும் வாடை போன்றவை இல்லாமல் போதை போன்ற மனநிலையை நுகர முடிகிறது என்பதாலும் இளைஞர்கள் இவ்வகை ஊசிக்கு அடிமையாகி வருவது தெரிகிறது. இந்த விபரீத கலாச்சாரத்தில் இருந்து இளையோரை மீட்கும் வகையில் காவல் துறையுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்..

தலைப்பு செய்திகள்

பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Salem Power Cut 04.07.2026 : சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் இன்று மின் தடை... முழு விவரம் இதோ!
Salem Power Cut 04.07.2026 : சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் இன்று மின் தடை... முழு விவரம் இதோ!
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
Salem Power Cut: சேலம் மக்களே கவனிங்க! நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை! உங்கள் பகுதி உள்ளதா?
Salem Power Cut: சேலம் மக்களே கவனிங்க! நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை! உங்கள் பகுதி உள்ளதா?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget