மேலும் அறிய

"தேர்தல் ஆணையம், காவல்துறை, நீதியரசர்கள் ஈரோடு தேர்தலை ரத்து செய்ய வேண்டும்"- பிரேமலதா விஜயகாந்த்

ஈரோடு கிழக்கு தேர்தலில் அறத்தோடு வாக்களித்தால் தேமுதிக தான் வெற்றி பெறும். ஏனென்றால் கேப்டனின் வழியில் ஜனநாயகத்தோடு செயல்படும் ஒரே கட்சி தேமுதிக.

சேலம் மாவட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறோம். தேமுதிகவின் 18 ஆண்டு கால அரசியலில் எத்தனையோ தேர்தல்களை சந்தித்துள்ளோம். ஆனால் இந்த மாதிரி ஒரு தேர்தலை நாங்கள் பார்த்ததே இல்லை. திராவிட மாடல் என்பதை அங்கு தான் பார்த்தோம். தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுப்பது, இலவசமாக பொருட்கள் கொடுப்பது எல்லா தொகுதிகளிலும் நடக்கும் ஒரு விஷயம். ஆனால் ஆடு, மாடுகளை அடைப்பது போல் பட்டறைகளில் மக்களை காலை முதல் இரவு வரை அடைத்து வைக்கின்றனர். இரவு வெளியேறும் போது 500 ரூபாய் கொடுத்து அனுப்பிக்கின்றனர். தேர்தல் அறிவித்தார் நாள் முதல் இன்று வரை இது போன்று நடந்து கொண்டு தான் உள்ளது. இதனை மனவேதனையோடு இங்கு பதிவு செய்கிறேன்.

ஒரு கிளியை அடைத்து வைத்ததற்கு ரோபோ ஷங்கருக்கு ரூபாய் 2.5 லட்சம் அபராதம் அளித்துள்ளனர். இத்தனை ஆயிரம் மக்களை அடைத்து ஓட்டு வாங்குகின்றனர். இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் நல்லது செய்திருந்தால், நாங்கள் நல்லது செய்து இருக்கிறோம் என்று வாக்கு கேட்டிருக்கலாம். இன்றைக்கு திராவிட மாடல் என்பது தெளிவாக ஈரோடு கிழக்கில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்களை பட்டறையில் அடைத்து வைப்பது தான் திராவிட மாடல். திருமங்கலம் ஃபார்முலா, கும்முடிபூண்டி ஃபார்முலா என எத்தனையோ ஃபார்முலாக்கள் உள்ளது. ஆனால் இனிவரும் காலங்களில் ஈரோடு கிழக்கு ஃபார்முலா, பட்டறை ஃபார்முலா திராவிட மாடலை நிரூபித்து இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் கூறும் பதில் எங்களுக்கு மன கஷ்டமாக உள்ளது. ஜனநாயக ரீதியாக அனைவருக்கும் தேர்தல் நடைபெற்றால் இங்கு நடக்கட்டும். ஆட்சி பலம், அதிகார பலம், பணபலம் உள்ளவர்களுக்கான தேர்தல் என்றால் அவர்களை மட்டும் வேட்பாளராக அறிவித்து, அவர்களை ஜெயித்ததாக அறிவித்து விடலாம். .

எங்களைப் போல் உண்மையான கட்சி, நேர்மையான கட்சி எதற்காக இருக்கிறோம். தேர்தல் ஆணையம், காவல்துறை, நீதியரசர்கள் ஈரோடு தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு மக்களை சந்திக்க விடவில்லை. காலையில் பட்டறையில் அடைத்து வைத்தால் இரவு தான் வெளியே விடுகின்றனர். தேமுதிக அதிமுக போன்ற கட்சியினர் மக்களை சந்தித்து விடக்கூடாது. அதுதான் அவர்கள் ஏய்ம். ஈரோடு கிழக்கு மக்கள் அனைவரும் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை வண்டிகளும் அங்குதான். தொழில் முடக்கும், 100 கோடி ரூபாய்க்கு நெசவு தொழில் உட்பட அனைத்து தொழில்களும் ஈரோட்டில் முடங்கியுள்ளது. திமுக பிளஸ் ஆக நினைப்பது அப்படியே எதிராக மாறப்போகிறது. திமுக தேர்தல் நேரத்தில் கூறிய எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஒன்றரைக் கால ஆட்சியில் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். இது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்றார். ஈரோடு கிழக்கு தேர்தலில் அறத்தோடு வாக்களித்தால் தேமுதிக தான் வெற்றி பெறும். ஏனென்றால் கேப்டனின் வழியில் ஜனநாயகத்தோடு செயல்படும் ஒரே கட்சி தேமுதிக தான்” என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Embed widget