மேலும் அறிய
Advertisement
முதல்வரின் அறிக்கையை பின்பற்றாத திமுகவினர் - தருமபுரியில் இடையூறாக இருந்த விளம்பர பதாகை
தருமபுரியில் மின்கம்பத்தை ஒட்டி திமுகவினர் விளம்பர பதாகை வைத்ததால், கம்பத்தின் மீது ஏற முடியாமல், ஜேசிபி உதவியுடன் மின் கம்பத்தில் ஏறி பணி செய்த மின் ஊழியர்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை இன்று திமுக தொண்டர்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, விளம்பர பதாகைகள் வைப்பது, ஆடம்பரம் செய்ய வேண்டாம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். ஏழை, எளியோர், ஆதரவற்றோர், வயது முதிர்ந்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குங்கள் என அறிக்கை விடுத்து இருந்தார். ஆனாலும் தருமபுரி மாவட்ட திமுகவினர், தருமபுரி நகரம், அரூர் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக தொண்டர்கள் முதலமைச்சரின் மீது கொண்ட அதீத பற்றால் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகளை வைத்துள்ளனர். மேலும் தருமபுரி நகர பகுதியில் நெசவாளர் காலனி அருகே வாழ்த்து பதாகையை மின்கம்பத்தில் கட்டியுள்ளனர்.
இந்நிலையில் நெசவாளர் காலனி அருகே உள்ள திருமண மண்டபம் தற்பொழுது இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த திருமண மண்டபத்திற்கு செல்கின்ற மின் இணைப்பை துண்டிப்பதற்காக, மின் ஊழியர்கள் வந்தனர். ஆனால் மின்கம்பத்தில் ஏற முடியாத அளவிற்கு விளம்பர பதாகை கட்டப்பட்டிருந்தால், மின் ஊழியர்களால் மின் இணைப்பை துண்டிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அருகில் கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை அழைத்து வந்து, ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் மின் ஊழியர் மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பைத் துண்டித்தார். இதனால் ஜேசிபி நீண்ட நேரமாக மின் கம்பத்தின் அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தனது பிறந்த நாளை பேனர் வைத்து ஆடம்பரம் செய்ய வேண்டாம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் திமுக தொண்டர்களுக்கு அறிக்கை விடுத்தும், தருமபுரி திமுகவினர், அவர் மீது கொண்ட அதீத பற்றால் பல்வேறு இடங்களில் களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைத்துள்ளனர்.
மேலும், மின்கம்பத்தில் வாழ்த்து பதாகை கட்டி, மின் ஊழியர்கள் பணி செய்ய இடையூறு ஏற்படுத்தி, முதலமைச்சரின் அறிக்கையை திமுகவினர் காற்றில் பறக்க விட்டுள்ளனர். தருமபுரியில் திமுகவினர் வைத்த விளம்பர பதாகையால் மின்கம்பத்தில் ஏற முடியாமல் ஜேசிபி உதவியுடன் பணியை செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion