மேலும் அறிய

தருமபுரியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்...! மனதை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

நெஞ்சை பதற வைக்கும் விபத்து நடந்த காட்சிகள் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, வண்டி எண்ணை வைத்து காவல் துறையினர் வழக்கு செய்து விசாரணை

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மூர்த்தி என்பவர் தனது நண்பரருடன் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே சாலையில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக திரும்பியுள்ளார்.
 
அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் இருந்து நகர்ப்புறம் நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மூர்த்தி மற்றும் அவருடன் வந்த நண்பர் ஸ்ரீராம்குமார் மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் என் ஐந்து பேரும் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து இந்த ஐந்து பேரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து  மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
தருமபுரியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்...! மனதை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 
இந்நிலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்து மற்றொரு இருசக்கர வாகனம் மோதும் காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தொடர்ந்து நெஞ்சை பதற வைக்கும் விபத்து நடந்த காட்சிகள் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, வண்டி எண்ணை வைத்து காவல் துறையினர் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டு குடும்பத்தினர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
 

தருமபுரியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்...! மனதை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 
 
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டியை சேர்ந்த ஜெயா, சுமதி, விஜயலட்சுமி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தலா, 3 செண்ட் அரசு இலவச வீட்டுமனை பட்டா பெற்றுள்ளனர். இந்நிலையில், ஜெயா, சுமதி, விஜயலட்சுமி இப்பகுதியில் வீடுகட்டும் பணியை துவங்கியுள்ளனர். அப்போது, ஜெயாவின் உறவினர்கள் அரசு வழங்கிய இடத்தில் தங்களுக்கு பங்கு வழங்க வேண்டும் என, நிர்பந்தம் செய்துள்ளார். இதுகுறித்து, ஜெயா உள்ளிட்டோர் கோட்டப்பட்டி காவல் நிஸைனய்தில்  புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், உறவினர்கள் ஜெயா குடும்பத்தினரிடம் தொடர்ந்து பங்கு கேட்டுள்ளனர். 
 

தருமபுரியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்...! மனதை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 
இதனால், விரக்தி அடைந்த ஜெயா, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தனது குடும்பத்தினருடன் வந்து உடலில், மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஜெயா, குமார், சுமதி, விஜயலட்சுமியை மீட்டு, விசாரணைக்காக தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தருமபுரியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்...! மனதை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 
இதே போல், தருமபுரி அடுத்த  நாகர்கூடல் அவ்வைநகரை சேர்ந்தவர் நாகவேணி என்பவர் கலப்பு திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து தந்தையின் நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும், நாகவேணியை, அவரது சித்தாப்பாக்கள் வீட்டை காலி செய்யும் படி மிரட்டியுள்ளனர். இதனால், விரக்தி அடைந்த  நாகவேணி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் பாதுகாப்பாக மீட்டு, தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தினர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு குடும்பத்தினர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget