மேலும் அறிய

காவலர் வாகனங்கள், உபகரணங்களை ஆய்வு செய்த சேலம் சரக டிஐஜி

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வாகனங்கள் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சேலம் சரக டிஐஜி ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறைக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் காவலர்கள் பயன்படுத்துகின்ற சீருடை, தலைக்கவசம் உள்ளிட்ட பல்வேறு வகையான உபகரணங்களை ஆண்டுதோறும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வில் சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் ஆய்வு செய்தார். அப்பொழுது இந்த ஆய்வில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டு, காவல் துறையினரின் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள், நடமாடும் கழிவறை வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். அப்பொழுது நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகள், சைரன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். 
 

காவலர் வாகனங்கள், உபகரணங்களை ஆய்வு செய்த சேலம் சரக டிஐஜி
 
இதனை தொடர்ந்து லாரிகள் மற்றும் வஜ்ரா வாகனங்களை உள்ளே ஏறி ஆய்வு செய்தார். இதையடுத்து காவல் துறையினர் பயன்படுத்துகின்ற சீருடை,லத்தி, தொப்பி, தலைக்கவசம், சிறு குறிப்பு பதிவேடு, தண்டனை பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது தடுப் காவலர்கள் பணியின் போது அணியும் தலைக்கவசம் அணியை செய்து ஆய்வு செய்தார். இதன் பிறகு காவலர்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்கின்ற காவலர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும், தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவலர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த ஆய்வில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உள்ளிட்ட  காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
 

 
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், அகவிலைப்படி, பழைய ஓய்வூதியம், சரண்டர், வரையறுக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

காவலர் வாகனங்கள், உபகரணங்களை ஆய்வு செய்த சேலம் சரக டிஐஜி
 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, தற்போதைய முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் இன்று ஓராண்டுகளுக்கு மேலாகியும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக் காலமாக மாற்றி வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு பணியில் உள்ள 6 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தைச் சார்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி திடீர் தீவிர ஆலோசனை... சட்டமன்றத்தில் பேசப்போவது என்ன?
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Embed widget