மேலும் அறிய

தருமபுரி: விளைநிலத்தில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு - கெயில் நிறுவனத்திற்கு எதிராக விவசாயி தற்கொலை

கெயில் திட்டம் சாலை மார்க்கமாக அமைக்க வேண்டும், உயிரழந்த விவசாயி உடும்புப் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தற்போது குழாய் செல்லும் பாதையை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு கெயில் நிறுவன குழாய் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த கெயில் குழாய் அமைப்பதற்கு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு பகுதிகள் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லைக்குள் நுழைகிறது.

தருமபுரி: விளைநிலத்தில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு - கெயில் நிறுவனத்திற்கு எதிராக விவசாயி தற்கொலை
 
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் இண்டூர் பகுதிகளில் நேற்று முதல் கெயில் நிறுவன குழாய் அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் கெயில் நிறுவன ஊழியர்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக அளவிடும் பணி நடைபெற்று வந்தது. அப்பொழுது விவசாயிகள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தினை சாலை மார்க்கமாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாலவாடி என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தருமபுரி: விளைநிலத்தில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு - கெயில் நிறுவனத்திற்கு எதிராக விவசாயி தற்கொலை
இந்நிலையில் கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் கணேசன்( 43) என்பவர்க்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலத்தின் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு நிலம் அளவீடு செய்யும் பணிக்காக கெயில் நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் நேற்றும் இன்றும் வந்திருந்தனர்.   இந்நிலையில் போராட்டம் நடந்த இடத்திலிருந்து தனது நிலத்துக்கு சென்றுள்ளார். தொடர்ந்து கணேசன் தனது வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் சென்று உடலை மீட்டனர். தொடர்ந்து கெயில் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி இறந்ததாக கூறி,  இறந்த விவசாயி கணேசனின் உடலை தருமபுரி-ஒகேனக்கல்  சாலையில் வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி: விளைநிலத்தில் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு - கெயில் நிறுவனத்திற்கு எதிராக விவசாயி தற்கொலை
 
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தருமபுரி எஸ்பி சி.கலைச்செல்வன், சார் ஆட்சியர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் கெயில் திட்டம் சாலை மார்க்கமாக அமைக்க வேண்டும், உயிரழந்த விவசாயி உடும்புப் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தற்போது குழாய் செல்லும் பாதையை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை அரசின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இறந்தவரின் சடலத்தை வைத்து விவசாயிகள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget