மேலும் அறிய

தருமபுரி அருகே காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டிய வனத்துறை

தற்பொழுது மற்றொரு யானை கிராமப் புறங்களுக்குள் நுழைந்து இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி அருகே தொடர்ந்து கரும்பு தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்குள் விரட்டினர்.
 
தருமபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி வனப்பகுதியில் இருந்து கடந்த 4 மாதத்திற்கு முன்பு வெளியேறிய ஒரு மக்னா யானை, ஒரு ஆண் யானை இரண்டும், உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், விவசாயி ஒருவரை தாக்கி உள்ளது. இதனை அடுத்து ஆனைமலையில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானையை வரவழைக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன்பு மக்னா யானையை மயக்க ஊசி போட்டு வனத் துறையினர் பிடித்துள்ளனர். தொடர்ந்து லாரி மூலம் கொண்டு சென்று மக்னா யானையை மேற்கு தொடர்ச்சி மலையில் விடப்பட்டது. அப்பொழுது ஆண் யானை வனப் பகுதிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை டாப்ஸ்லிப் மேற்கு தொடர்ச்சி மலையில் விடப்பட்டது.

தருமபுரி அருகே காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டிய வனத்துறை
    
 தொடர்ந்து மற்றொரு ஆண் யானை வனப் பகுதியை விட்டு வெளியே வரும் பொழுது பிடிக்கும் முயற்சியை மேற்கொள்ள வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஒற்றை ஆண் யானை ஈச்சம்பள்ளம் வனப் பகுதியை விட்டு வெளியேறி, தருமபுரி அடுத்த முத்து கவுண்டன்கொட்டாய் பகுதியில் காலை முதலே சுற்றி திரிந்து. இதனை தொடர்ந்து வனத் துறையினர் ஆண் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த ஆண் யானை பெருமாள் என்பவரின் கரும்பு தோட்டத்தில் நுழைந்து, கரும்பை சாப்பிட்டு ஓய்வெடுத்து வந்தது‌.
இதனால் வனத் துறையினர் யானையை கண்காணித்து வந்தனர்.‌ மேலும் மாலை நேரத்தில் யானை வெளியில் வரும்போது வனப் பகுதிக்கு விரட்ட திட்டமிட்டனர்.

தருமபுரி அருகே காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டிய வனத்துறை
 
அதனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட வனத் துறையினர் நேற்று மாலை யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை தொடர்ந்தனர். அப்பொழுது யானையை ஊருக்குள் நுழையாமல், வனப் பகுதிக்குள் விரட்ட பட்டாசு வெடித்தும், தீ மூட்டியும் யானையை கரும்பு காட்டுக்குள் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டு யானை கரும்பு காட்டில் இருந்து வெளியேறியது. அப்பொழுது வனத் துறையினர் பட்டாசு வெடித்து கொண்டே யானையை பென்னாகரம் நோக்கி விரட்டுச் சென்றனர். இதனையடுத்து யானை பாப்பாரப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் மலைப் பகுதிக்குள் நுழைந்தது. கடந்த நான்கு, ஐந்து மாதமாக இரண்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை அழித்து வந்த நிலையில், ஒரு யானையை வனத் துறையினர் பிடித்ததை நினைத்து பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்தனர். ஆனால் தற்பொழுது மற்றொரு யானை கிராமப் புறங்களுக்குள் நுழைந்து இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுப்பதற்கு வனத் துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget