மேலும் அறிய

மக்களின் கோரிக்கையை கேட்டு தருமபுரியில் புதிய நியாய விலைக்கடை திறப்பு

தருமபுரி அருகே தனியாக நியாய விலை கேட்ட கிராம மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, புதிய கடை திறப்பு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலூர் கோபாலம்பட்டி பகுதியில் நியாய விலை கடை வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2006ம் ஆண்டு முதல் 16 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போதும் அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம் தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.  இந்நிலையில் தருமபுரி சட்டப்பேர உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று சட்டமன்றத்தில் கோவிலூர் பகுதிக்கு புதிய நியாய விலை கடை தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்றும், இப்பகுதி மக்கள் நல்லம்பள்ளி சென்று நியாய விலை பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ஒரே நியாய விலை கடைகளில் பொருள் விநியோகம் செய்வதால் கூட்ட நெரிச்சல் ஏற்படுவதாகவும் கூறி, கோவிலூர் அல்லது கோபாலம்பட்டி பகுதியில் நியாய விலை கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
 

மக்களின் கோரிக்கையை கேட்டு தருமபுரியில் புதிய நியாய விலைக்கடை திறப்பு
இதனை தொடர்ந்து கடந்த மாதம்  உணவுத்துறை அமைச்சர் மற்றும் உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புதுறை செயலாளர் ராதாகிருஷ்ணனை நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து நல்லம்பள்ளி கடையிலிருந்து 333 குடும்ப அட்டைகளை தனியாக பிரித்து கோவிலூர் பகுதியில் நியாய விலை கடையை திறக்க தமிழக அரசு ஆணையிட்டது. இதனை அடுத்து இன்று புதிய நியாய விலை கடையை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திறந்து வைத்து,பொதுமக்களுக்கு நியாய விலை கடை பொருட்கள் வழங்கினார். இதனையடுத்து 16 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

 
 
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக குறைந்தது.
 
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 6,500 கன அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை, காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்து வந்தது. இதனால் தமிழக எல்லையன  பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து தொடர்ந்து ஒரு வாரமாக சரிந்து வந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்தது. ஆனால் மீண்டும் இன்று குறைய தொடங்கி, காலை வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக குறைந்தது.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தொடர்ந்து நீர்வரத்து குறையும் என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
Embed widget