மேலும் அறிய

மக்களின் கோரிக்கையை கேட்டு தருமபுரியில் புதிய நியாய விலைக்கடை திறப்பு

தருமபுரி அருகே தனியாக நியாய விலை கேட்ட கிராம மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, புதிய கடை திறப்பு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலூர் கோபாலம்பட்டி பகுதியில் நியாய விலை கடை வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 2006ம் ஆண்டு முதல் 16 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போதும் அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம் தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.  இந்நிலையில் தருமபுரி சட்டப்பேர உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று சட்டமன்றத்தில் கோவிலூர் பகுதிக்கு புதிய நியாய விலை கடை தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்றும், இப்பகுதி மக்கள் நல்லம்பள்ளி சென்று நியாய விலை பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ஒரே நியாய விலை கடைகளில் பொருள் விநியோகம் செய்வதால் கூட்ட நெரிச்சல் ஏற்படுவதாகவும் கூறி, கோவிலூர் அல்லது கோபாலம்பட்டி பகுதியில் நியாய விலை கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
 

மக்களின் கோரிக்கையை கேட்டு தருமபுரியில் புதிய நியாய விலைக்கடை திறப்பு
இதனை தொடர்ந்து கடந்த மாதம்  உணவுத்துறை அமைச்சர் மற்றும் உணவு மற்றும் நுகா்வோர் பாதுகாப்புதுறை செயலாளர் ராதாகிருஷ்ணனை நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து நல்லம்பள்ளி கடையிலிருந்து 333 குடும்ப அட்டைகளை தனியாக பிரித்து கோவிலூர் பகுதியில் நியாய விலை கடையை திறக்க தமிழக அரசு ஆணையிட்டது. இதனை அடுத்து இன்று புதிய நியாய விலை கடையை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திறந்து வைத்து,பொதுமக்களுக்கு நியாய விலை கடை பொருட்கள் வழங்கினார். இதனையடுத்து 16 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

 
 
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக குறைந்தது.
 
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 6,500 கன அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை, காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்து வந்தது. இதனால் தமிழக எல்லையன  பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து தொடர்ந்து ஒரு வாரமாக சரிந்து வந்த நிலையில், நீர்வரத்து அதிகரித்தது. ஆனால் மீண்டும் இன்று குறைய தொடங்கி, காலை வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக குறைந்தது.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தொடர்ந்து நீர்வரத்து குறையும் என மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
Embed widget