மேலும் அறிய

காவிரியில் நீர்வரத்து குறைந்தவுடன் ஒக்கேனேக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- தருமபுரி ஆட்சியர்...!

’’தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு சுற்றுலா தளங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது’’

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வள்ளல் அதியமான் கோட்டம் வளாகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், வருவாய் துறை உள்ளிடட பல்வேறு துறைகளின் சார்பில் 156 பயனாளிகளுக்கு 94.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த விழாவில் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, மின்னனு குடும்ப அட்டை, பிரதமர் வீடு, பசுமை வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் திவ்யதர்சினி பயனாளிகளுக்கு வழங்கினார்.
 
காவிரியில் நீர்வரத்து குறைந்தவுடன் ஒக்கேனேக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- தருமபுரி ஆட்சியர்...! 
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி,
 
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 7708 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களில் 4295  தகுதியான நபர்களைத் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. இந்த உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் அரசு அலுவலர்கள் நேரில் சென்று உரிய விசாரணை நடத்தி, எந்த ஒரு மனுவையும், தகுதி இல்லை என்று நிராகரிக்காமல் 95% நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் மலை கிராமங்கள் உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் வயது முதிர்ந்த ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மருத்துவமனைக்கு வராமலேயே, அவர்களது வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகளை மருத்துவ துறையினர் வழங்கி வருகின்றனர்.
 
காவிரியில் நீர்வரத்து குறைந்தவுடன் ஒக்கேனேக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- தருமபுரி ஆட்சியர்...!
 
தருமபுரி மாவட்டத்தில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்களை உருவாக்க, மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒகேனக்கல் போன்ற அதிக மக்கள் வந்து செல்லும் ஒரு சில பகுதிகளில் 90% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அரது மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதால், விரைவில் மாவட்டத்தில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமம் என்ற இலக்கை அடைவோம்.
 
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு சுற்றுலா தளங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஒகேனக்கல் பொறுத்தவரை, தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதால், பரிசல் இயக்க முடியாமல், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியாத நிலையுள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தவுடன், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். தருமபுரியில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 90% நிலம் எடுக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளது.  இதற்கு அரசிடமிருந்து உத்தரவு பெறப்பட்டு தொழில் நிறுவனங்கள் முன் வந்தவுடன் தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Embed widget