மேலும் அறிய

காவிரியில் நீர்வரத்து குறைந்தவுடன் ஒக்கேனேக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- தருமபுரி ஆட்சியர்...!

’’தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு சுற்றுலா தளங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது’’

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வள்ளல் அதியமான் கோட்டம் வளாகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், வருவாய் துறை உள்ளிடட பல்வேறு துறைகளின் சார்பில் 156 பயனாளிகளுக்கு 94.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த விழாவில் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, மின்னனு குடும்ப அட்டை, பிரதமர் வீடு, பசுமை வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் திவ்யதர்சினி பயனாளிகளுக்கு வழங்கினார்.
 
காவிரியில் நீர்வரத்து குறைந்தவுடன் ஒக்கேனேக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- தருமபுரி ஆட்சியர்...! 
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி,
 
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 7708 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களில் 4295  தகுதியான நபர்களைத் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. இந்த உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் அரசு அலுவலர்கள் நேரில் சென்று உரிய விசாரணை நடத்தி, எந்த ஒரு மனுவையும், தகுதி இல்லை என்று நிராகரிக்காமல் 95% நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் மலை கிராமங்கள் உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் வயது முதிர்ந்த ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மருத்துவமனைக்கு வராமலேயே, அவர்களது வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகளை மருத்துவ துறையினர் வழங்கி வருகின்றனர்.
 
காவிரியில் நீர்வரத்து குறைந்தவுடன் ஒக்கேனேக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- தருமபுரி ஆட்சியர்...!
 
தருமபுரி மாவட்டத்தில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்களை உருவாக்க, மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒகேனக்கல் போன்ற அதிக மக்கள் வந்து செல்லும் ஒரு சில பகுதிகளில் 90% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அரது மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதால், விரைவில் மாவட்டத்தில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமம் என்ற இலக்கை அடைவோம்.
 
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு சுற்றுலா தளங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஒகேனக்கல் பொறுத்தவரை, தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதால், பரிசல் இயக்க முடியாமல், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியாத நிலையுள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தவுடன், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். தருமபுரியில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 90% நிலம் எடுக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளது.  இதற்கு அரசிடமிருந்து உத்தரவு பெறப்பட்டு தொழில் நிறுவனங்கள் முன் வந்தவுடன் தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget