மேலும் அறிய

தருமபுரி: வாணியாறு அணையின் வலது இடது கால்வாய்கள் வழியாக வினாடிக்கு 40 கன அடி வீதம் உபரிநீரை திறப்பு

வினாடிக்கு 40 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் கதவு வழியாக உபரிநீர் வினாடிக்கு 40 கனஅடி என மொத்தம் 120 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்  ஏற்காடு மலைப் பகுதியில் இருந்து வரும் உபரி நீரை தேக்கி வைக்கும் வகையில், 1985 ஆம் ஆண்டு வாணியாறு நீர்த்தேக்க அணை கட்டப்பட்டது. இந்த அணையில் இடதுபுற, வலதுபுற கால்வாய்கள் மூலம், வெங்கடசமுத்திரம், மூளையானூர், மெணசி, ஆலாபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைகோட்டை, பறையப்பட்டி புதூர், அதிகாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  10,517 ஏக்கர்  விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும்  இடது புற கால்வாய் வாணியாறு அணையில் இருந்து அரூர் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை வரை 17 கிலோ மீட்டர் தூரம் விவசாய சாகுபடிக்காக செல்கிறது. இந்த கால்வாய் மேடான பகுதியில் செல்வதால் 60 கன அடி தண்ணீர் செல்லக் கூடிய கால்வாயில் 30 முதல் 40 கன அடி தண்ணீர் தான் செல்கிறது. இடது புற கால்வாயில் அணையின் முகப்பில் 15 அடி ஆழ பள்ளத்தில் உள்ளதாலும் கால்வாய் செல்ல செல்ல அதிக மேடான பகுதியாக இருப்பதாலும் தண்ணீர் செல்லும் வேகம் படிப்படியாக குறைந்து, விவசாயத்திற்கு தேவையான போதிய நீர் கிடைப்பதில்லை.
 

தருமபுரி: வாணியாறு அணையின் வலது இடது கால்வாய்கள் வழியாக வினாடிக்கு 40 கன அடி வீதம் உபரிநீரை திறப்பு
 
அதனால் விவசாயிகள் இந்த கால்வாயை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு படிப்படியாக கால்வாயை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தி நீர் திறந்துவிட்டால் மட்டுமே, விவசாயிகள் எதிர்பார்க்கின்ற 60 கன அடி தண்ணீரை விவசாயிகள் பெறலாம் என்ற நோக்கத்தில் அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப் பணித்துறை சார்பில் இடதுபுற, வலதுபுற கால்வாயை தூர்வாரி மறு சீரமைப்பு பணிக்காக 16 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இடது, வலது புற கால்வாய்கள் மற்றும் ஜீவா நகர், பறையப்பட்டி புதூர், வெங்கடசமுத்திரம் உள்ளிட்ட 5 தடுப்பணைகள் சீரமைப்பு பணி முடிந்துள்ளது.
 

தருமபுரி: வாணியாறு அணையின் வலது இடது கால்வாய்கள் வழியாக வினாடிக்கு 40 கன அடி வீதம் உபரிநீரை திறப்பு
 
இந்நிலையில கடந்த இரண்டு மாதங்களாக பெய்து மழையால் வாணியாறு அணை நிரம்பி உபரிநீர் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஜனவரி மாதம் கால்வாய்கள் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட கால்வாய் மற்றும் தடுப்பணைகள் வழியாக தண்ணீர் கடைசி வரை செல்கிறதா? தடுப்பணைகளின்  கதவுகள் சரியாக இருக்கின்றனவா என்பது குறித்து அறிய தற்போது இடது, வலது புற கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
 
இதனை கடைமடை வரை சோதனை செய்து விட்டு, ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு சரி செய்ய வேண்டும் என்பதற்காக இடது வலது புற கால்வாய்கள் வழியாக வினாடிக்கு 40 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் கதவு வழியாக உபரிநீர் வினாடிக்கு 40 கனஅடி என மொத்தம் 120 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் ஓரிரு நாட்களில் நிறுத்தப்பட்டு, மீண்டும் ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
Embed widget