மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தருமபுரியில் ஆதரவற்ற குழந்தைகள் புடைசூழ திருமணம் செய்து கொண்ட தம்பதி
’’இது போன்ற திருமண விழாக்களுக்கு அழைத்து உணவளிப்பதால் அவர்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள்’’
![தருமபுரியில் ஆதரவற்ற குழந்தைகள் புடைசூழ திருமணம் செய்து கொண்ட தம்பதி couple got married after providing welfare assistance to destitute children and disabled street performers near Pennagaram. தருமபுரியில் ஆதரவற்ற குழந்தைகள் புடைசூழ திருமணம் செய்து கொண்ட தம்பதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/16/8da3cb8a85928cd1a5d193aeb3ccdfc9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருமணம் செய்த கொண்ட தம்பதி
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தின்னப்பட்டி சேர்ந்த மாவீரன் பிள்ளை பட இயக்குனர் ராஜா என்பவருக்கும் அனுசியா என்கின்ற பெண்ணுக்கும் நாகதாசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்களை விட ஆதரவற்ற குழந்தைகளும், முதியவர்களும், பெரியவர்களும் காதுகேளாத குழந்தைகளும், மாற்று திறனாளிகளும் அதிகளவில் கலந்து கொண்டனர். அதே போல் நலிவடைந்த தெருக்ககூத்து கலைஞர்களும் அதிகமாக இருந்தனர்.
![தருமபுரியில் ஆதரவற்ற குழந்தைகள் புடைசூழ திருமணம் செய்து கொண்ட தம்பதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/16/952ee6227fdecfec9218b8ce4146740b_original.jpg)
இதனை தொடர்ந்து புதுமாப்பிள்ளை ராஜா அனைவரையும் வாகனம் வைத்து அழைத்து வந்து புது மண தம்பதிகள் உணவு பரிமாறினர். இதனை தொடர்ந்து புதிய ஆடைகள் கொடுத்து மகிழ்ந்தனர். அதே போல் ஆதற்றவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். எல்லா திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உபசரிப்பது வழக்கம். ஆனால் இந்த திருமணத்தில் புதுமாப்பிள்ளை ராஜா ஆதரவற்றவர்களை அழைத்து வந்து திருமணத்தில் கலந்து கொள்ள செய்தார். இது திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரையும் நெகழ வைத்தது. இந்த நிகழ்வில் திரைப்பட நடிகர் ராதாரவி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
![தருமபுரியில் ஆதரவற்ற குழந்தைகள் புடைசூழ திருமணம் செய்து கொண்ட தம்பதி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/16/aff935beaabfdc335e55aea4f4a5b0e4_original.jpg)
இது குறித்து மாப்பிள்ளை ராஜா கூறும் போது ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதவரற்ற மூதியவர்கள் ஆசரமங்களிலியே உணவளித்து வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இது போன்ற திருமண விழாக்களுக்கு அழைத்து உணவளிப்பதால் அவர்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion