மேலும் அறிய

தருமபுரி: கனமழையால் காவிரியில் நீர்வரத்து 16,000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 16,000 கன அடியாக அதிகரிப்பு.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழை முற்றிலும் குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு அடிப்படையாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில்  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. 

தருமபுரி: கனமழையால் காவிரியில் நீர்வரத்து 16,000 கன அடியாக அதிகரிப்பு
தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, அதிகரித்து வினாடிக்கு 14,000 கன அடியாக உயர்ந்தது. தற்போது இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டு நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கின் போது, ஒகேனக்கல்லில் பாதுகாப்பு அம்சங்கள் சேதமடைந்ததால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, பரிசல் செல்ல மட்டும் அனுமதி வழங்கியும், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக மாறி, மாறி வருகிறது. 

 
ஏாியூா் அடுத்த பெரும்பாலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பியதால் பாதியிலையே முடிந்த கிராம சபை கூட்டம். 
 
அக்டோபா் 2 காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி தருமபுாி மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளிலும் கிராம சபை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் காரசாரமான விவதாங்களுடன் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. தருமபுாி மாவட்டம் ஏாியூா் ஒன்றியம் பெரும்பாலை ஊராட்சியில் பேருந்து போக்குவரத்து இல்லாத ஒரு கிராமத்தில் கிராம சபை கூட்டம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலை ஊராட்சியில் 12 வாா்டு உறுப்பினா்கள் உள்ள நிலையில் 6 வாா்டு உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். இந்த கிராமசபை கூட்டத்தில் ஆகஸ்ட் 15 ல், கிராம சபா கூட்டம் நடைபெற்றது போல தாங்களே கையெழுத்து போட்டு கொண்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர் நிதியான 18.5 லட்சம் எவ்வாறு செலவிடப்பட்டது என்றும், 100 நாள் வேலை திட்டத்தில் நடந்த முறைகேட்டை குறித்தும் கேள்விகள் எழுப்பபட்டது. 

தருமபுரி: கனமழையால் காவிரியில் நீர்வரத்து 16,000 கன அடியாக அதிகரிப்பு
 
ஆனால் இதற்கு உாிய வரவு செலவு கணக்கை திமுகவை சோ்ந்த ஊராட்சி தலைவா் கஸ்தூாி மற்றும் ஊராட்சி செயலாளா் முருகன் பதில் கூறாமல் இருந்தனா். மேலும் பெண் கவுன்சிலா்களின் கணவா்கள் தான் கிராம சபையில் கலந்து கொண்டனா். அப்பொழுது காரசாரமான விவதாங்கள் நடைபெற்றது. இதனையடுத்து கிராமசபையில் இருந்து 4 வாா்டு உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். மேலும் திமுகவை சேர்ந்த நபர்கள் கூட்டத்தில் அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி, கேள்வி கேட்ட இளைஞர்களை பேசியதால் மக்களும், இளைஞர்களும் புறக்கணித்து சென்றனர். இன்றும் கிராம சபை கூட்டம் நடந்து முடிந்தது என்று தங்களுக்குள்ளே கையெழுத்து போட்டு கொண்டனர். இதனால் கண்துடைப்புக்காக கிராம சபை நடைபெற்றது. இதேபோல் தொப்பூா் அருகே உள்ள உம்மியம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் பல்வேறு புகாா்கள் எழுப்பபட்டு காரசாரமான விவதாங்கள் நடைபெற்றது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget