மேலும் அறிய

EPS Case: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு - சாட்சியாக ஓபிஎஸ் பெயர் சேர்ப்பு

எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதும், புகார்தாரர் சாட்சியாக ஓபிஎஸ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்குரைஞர் மிலானி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவரது அசையும் அசையா சொத்துக்கள், தொழில் வருமானங்களுக்கான ஆவணங்களில் பொய்யான தகவலை கூறியுள்ளார். விவசாய நிலங்கள் இல்லை எனக் கூறியுள்ளார். நில வழிகாட்டி மதிப்பை காட்டிலும் சொத்து மதிப்பை குறைத்து காட்டியுள்ளார். இதேபோல் பிஎஸ்.சி படித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் படிப்பை முடிக்கவில்லை. எனவே இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தவறானது எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இது தொடர்பான விசாரணை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வழக்கினை விசாரித்த நீதிபதி கலைவாணி இந்த வழக்கு தொடர்பாக 30 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு சேலம் மத்திய குற்ற பிரிவினருக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுநல வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் மிலானிக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

EPS Case: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு - சாட்சியாக ஓபிஎஸ் பெயர் சேர்ப்பு

மேலும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 125A(1), 125A(ii), 125A(iii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நான்காம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள், வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள், அவரது மனைவி வருமான வரி கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் திரட்டி வந்தனர். அதே நேரத்தில் புகார்தாரரான மிலானியை காவல்துறையினர் முதற்கட்டமாக விசாரித்துள்ளனர். மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் மே 26 ஆம் தேதி (நேற்று) விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி நேற்று சேலம் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். 

EPS Case: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு - சாட்சியாக ஓபிஎஸ் பெயர் சேர்ப்பு

சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை அறிக்கையில், புகாரில் முகாந்திரம் இருப்பதால் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் புகார் கொடுத்துள்ளார் உண்மைதானா என்பதை கண்டறிய வருமான வரித்துறை, வங்கிகள் உள்ளிட்ட அலுவலகங்களில் ஆவணங்களை காவல்துறையினர் பெற்று வருகின்றனர். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியை அனைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் புகார் தரார் அளித்த தகவலின் அடிப்படையில் சாட்சியாக ஓபிஎஸ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று புகார்தாரர் அளித்த 1,338 பக்க ஆவணங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகின்ற 6 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதும், புகார்தாரர் சாட்சியாக ஓபிஎஸ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Embed widget