மேலும் அறிய

பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற தாய்; மனம் திருந்தி வந்தார் - நடந்தது என்ன..?

வீட்டை எதிா்த்து காதல் திருமணம் செய்ததாகவும் கணவா் மதுவிற்கு அடிமையானதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வாழ பிடிக்காமல் வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

தருமபுரி பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற இளம்பெண், மனம் திருந்தி வந்ததால், காவல்  துறையினர் எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர்.
 
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில்  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்து இருக்கையில் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை இருந்துள்ளது. தொடர்ந்து  பேருந்து பயணிகளுடன் புறப்பட தயாரான நேரத்தில் பேருந்து இருக்கையில், இருந்த அந்த குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பயணிகள் குழந்தையின் பெற்றோரை தேடினர். ஆனால் யாரும் வராத சூழலில் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு பயணிகளை அழைத்து வரும் தரகர் பெரியசாமி உடனடியாக குழந்தையை மீட்டு தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் கடை வியாபாரிகள் உதவியுடன் ஒப்படைத்தார்.
 
பின்னர் தருமபுரி காவல் ஆய்வாளர் நவாஸ் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை விட்டு சென்ற மர்ம பெண் யார் என்பது குறித்து கண்டறிய, பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அப்பொழுது பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு மர்ம பெண் சுமார் 2 வயது மதிக்கதக்க பெண் குழந்தையுடன், குளிர்பான கடையில், குளிர்பானம், தண்ணீர் மற்றும் குழந்தைக்கு சிப்ஸ் வாங்கி கொடுத்தும், தான் குடித்து விட்டு, குழந்தைக்கு ஊட்டுவதும் என மாறி, மாறி அருந்திவிட்டு, குழந்தையை தூக்க சென்றார். இதனையடுத்து நின்றிருந்த அரசு பேருந்தில்  முன்பக்கமாக ஏறி, பின்னர் குழந்தையை பேருந்தில் விட்டு விட்டு பின்பக்க படி வழியாக இறங்கி சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் வைத்து பார்க்கும் போது,  இந்த பெண் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா? குடும்ப பிரச்னை காரணமாக தாயே குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றாரா?  இந்த குழந்தைக்கு உண்மையான பெற்றோர் யார்? என கண்டறியும் பணியிலும் மற்றும் அந்த மர்ம பெண் குறித்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனா்.

பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற தாய்; மனம் திருந்தி வந்தார் - நடந்தது என்ன..?
 
இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதனால் அச்சமடைந்த குழந்தையை விட்டு சென்ற பெண் தாமக முன்வந்து தருமபுாி நகர காவல் நிலையத்தில் தான் விட்டு சென்றது தவறு என்றும் என் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டாா். அதனை தொடா்ந்து காவல்துறையினா் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற தாய்; மனம் திருந்தி வந்தார் - நடந்தது என்ன..?
 
அப்போது வந்தவாசி பகுதியை சோ்ந்த ராஜேஸ்வாி என்றும் தஞ்சாவூரை சோ்ந்த செல்வம் என்பவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீட்டை எதிா்த்து காதல் திருமணம் செய்ததாகவும் கணவா் மதுவிற்கு அடிமையானதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வாழ பிடிக்காமல் வாழ்ந்து வந்ததாகவும் சேலத்தில் ஹோட்டலில் பணிபுாிந்து தன் குழந்தையை காப்பாற்ற முடியாமல் தவித்து வந்ததால் குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு செல்ல முடிவு செய்தேன். ஆனால் என் தவறை உணா்ந்து கொண்டேன் என்று கூறினார். குழந்தையை பத்திரமாக பாதுகாப்பதாகவும் பெண் கூறியதால் தாயிடம் குழந்தையை காவல்துறையினா் அறிவுரை கூறி ஒப்படைத்தனா்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget