மேலும் அறிய

பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற தாய்; மனம் திருந்தி வந்தார் - நடந்தது என்ன..?

வீட்டை எதிா்த்து காதல் திருமணம் செய்ததாகவும் கணவா் மதுவிற்கு அடிமையானதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வாழ பிடிக்காமல் வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

தருமபுரி பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற இளம்பெண், மனம் திருந்தி வந்ததால், காவல்  துறையினர் எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர்.
 
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில்  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்து இருக்கையில் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை இருந்துள்ளது. தொடர்ந்து  பேருந்து பயணிகளுடன் புறப்பட தயாரான நேரத்தில் பேருந்து இருக்கையில், இருந்த அந்த குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பயணிகள் குழந்தையின் பெற்றோரை தேடினர். ஆனால் யாரும் வராத சூழலில் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு பயணிகளை அழைத்து வரும் தரகர் பெரியசாமி உடனடியாக குழந்தையை மீட்டு தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் கடை வியாபாரிகள் உதவியுடன் ஒப்படைத்தார்.
 
பின்னர் தருமபுரி காவல் ஆய்வாளர் நவாஸ் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை விட்டு சென்ற மர்ம பெண் யார் என்பது குறித்து கண்டறிய, பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அப்பொழுது பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு மர்ம பெண் சுமார் 2 வயது மதிக்கதக்க பெண் குழந்தையுடன், குளிர்பான கடையில், குளிர்பானம், தண்ணீர் மற்றும் குழந்தைக்கு சிப்ஸ் வாங்கி கொடுத்தும், தான் குடித்து விட்டு, குழந்தைக்கு ஊட்டுவதும் என மாறி, மாறி அருந்திவிட்டு, குழந்தையை தூக்க சென்றார். இதனையடுத்து நின்றிருந்த அரசு பேருந்தில்  முன்பக்கமாக ஏறி, பின்னர் குழந்தையை பேருந்தில் விட்டு விட்டு பின்பக்க படி வழியாக இறங்கி சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் வைத்து பார்க்கும் போது,  இந்த பெண் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா? குடும்ப பிரச்னை காரணமாக தாயே குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றாரா?  இந்த குழந்தைக்கு உண்மையான பெற்றோர் யார்? என கண்டறியும் பணியிலும் மற்றும் அந்த மர்ம பெண் குறித்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனா்.

பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற தாய்; மனம் திருந்தி வந்தார் - நடந்தது என்ன..?
 
இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதனால் அச்சமடைந்த குழந்தையை விட்டு சென்ற பெண் தாமக முன்வந்து தருமபுாி நகர காவல் நிலையத்தில் தான் விட்டு சென்றது தவறு என்றும் என் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டாா். அதனை தொடா்ந்து காவல்துறையினா் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற தாய்; மனம் திருந்தி வந்தார் - நடந்தது என்ன..?
 
அப்போது வந்தவாசி பகுதியை சோ்ந்த ராஜேஸ்வாி என்றும் தஞ்சாவூரை சோ்ந்த செல்வம் என்பவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீட்டை எதிா்த்து காதல் திருமணம் செய்ததாகவும் கணவா் மதுவிற்கு அடிமையானதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வாழ பிடிக்காமல் வாழ்ந்து வந்ததாகவும் சேலத்தில் ஹோட்டலில் பணிபுாிந்து தன் குழந்தையை காப்பாற்ற முடியாமல் தவித்து வந்ததால் குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு செல்ல முடிவு செய்தேன். ஆனால் என் தவறை உணா்ந்து கொண்டேன் என்று கூறினார். குழந்தையை பத்திரமாக பாதுகாப்பதாகவும் பெண் கூறியதால் தாயிடம் குழந்தையை காவல்துறையினா் அறிவுரை கூறி ஒப்படைத்தனா்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget