மேலும் அறிய

தருமபுரி மாவட்டத்தில் 7.03 லட்சம்  பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்-ஆட்சியர் திவ்யதர்சினி பேட்டி 

’’தருமபுரி மாவட்டத்தில் மொத்த மக்கள் 16 இலட்சம் பேர் உள்ளனர். இதில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள தகுதியான 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 12.03 லட்சம் பேர் உள்ளனர்’’

தருமபுரி மாவட்டத்தில் வருகிற ஞாயிற்று கிழமை 5-வது கொரோனா தடுப்பு செலுத்திக் கொள்ள மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர்  ச.திவ்யதர்சினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, தருமபுரி மாவட்டத்தில் மொத்த மக்கள் 16 இலட்சம் பேர் உள்ளனர். இதில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள தகுதியான 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 12.03 லட்சம் பேர் உள்ளனர். தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் 7,08,262 பேர் என, சராசரியாக 59 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சீரிய முயற்சி கொரோனா தடுப்பூசி செலுத்தும், 4 மெகா தடுப்பூசி முகாமில் 1,53,203 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 
நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாமிற்கு 97,000 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இந்த தடுப்பூசி முகாமில், முதல் தவணை தடுப்பூசி 15.07.21 முன்னாடி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாம் தவனை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். எனவே இந்த முகாமினை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
தருமபுரி மாவட்டத்தில் நாளை ஒரு சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி,  அரூர் பகுதிகளை உள்ளடக்கிய 18-வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் 89 வாக்கு சாவடி மையத்தில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குச் சாவடி மையங்களில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் 14 இடங்களில் உள்ள 21 வாக்குச் சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளை ஒரு மாதங்களாகவே காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதில் 50 சதவீத வாக்குச்சாவடி மையங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், வீடியோ கிராபர்கள் தயார் செய்யப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
மேலும் தென்பெண்ணை ஆற்றில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில், வெள்ள பெருக்கு பாதிப்புகள் ஏதுமில்லை. ஆனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கே.ஈச்சம்பாடி அணை கட்டியிருந்த தண்ணீர் திறப்பது குறித்து, நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
Embed widget