மேலும் அறிய

தருமபுரி: பழுதாகி நின்ற லாரி மீது 3 லாரிகள் மோதல்-2பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்...!

’’தொப்பூர் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சாலை விபத்துகள் நடப்பது அதிகமாகி வருகிறது’’

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் பணியை முடித்து  விட்டு,   கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் இன்று நள்ளிரவில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, லாரி திடீரென பழுதானது. இந்த வாகனத்தில் பழுது நீக்கும் பணியில் திருச்சி மற்றும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 12 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து கற்கள் பாரம் ஏற்றி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்றிருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது கற்கள் பாரம் ஏற்றி வந்த லாரியை பின் தொடர்ந்து, குஜாராத்தில் இருந்து அவினாசி க்கு உருளைக் கிழங்கு ஏற்றி வந்த லாரி மற்றும் அதனையடுத்து வந்த மற்றொரு சரக்கு வாகனம் என அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தருமபுரி: பழுதாகி நின்ற லாரி மீது 3 லாரிகள் மோதல்-2பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்...!
 
இந்த விபத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு லாரியில் வந்த திருச்சி மாவட்டம் எடமலைபுதூரை சேர்ந்த  ரத்தினவேல், கல் பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த சித்தையன்  ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விருதுநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (32), மாரியப்பன் (28),  திருச்சியைச் சேர்ந்த பாண்டியன்(30), பகவதி ராஜ்(34), மதன்குமார்(25) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த அனுமந்தன் (43), ராமகிருஷ்ணன் (37), ரமேஷ் (43) உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் பாளையம் சுங்கச் சாவடி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு, அவசர ஊர்திகளின் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
 

தருமபுரி: பழுதாகி நின்ற லாரி மீது 3 லாரிகள் மோதல்-2பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்...!
 
மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய வாகனங்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 

தருமபுரி: பழுதாகி நின்ற லாரி மீது 3 லாரிகள் மோதல்-2பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்...!
 
தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது 3 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானதில், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தொப்பூர் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget