மேலும் அறிய

பார்லிமென்டில் மிரட்டப்போகும் கெஜ்ரிவால்? செம்ம ரூட்டா இருக்கே.. ஆனா யாரும் எதிர்பார்க்கல!

Kejriwal: ஆம் ஆத்மி கட்சியின் எம்பி-ஆக உள்ள சஞ்சீவ் அரோராவை, இடைத்தேர்தலில் களம் இறக்கி இருக்கிறார் கெஜ்ரிவால். எனவே, அவருக்கு பதில் தானே மாநிலங்களவைக்கு செல்ல கெஜ்ரிவால் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

Rajya Sabha MP Kejriwal: சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஆக அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சஞ்சீவ் அரோராவை, பஞ்சாப் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் இறக்கி இருக்கிறார் கெஜ்ரிவால். எனவே, சட்டமன்றத்திற்கு சஞ்சீவ் அரோராவை அனுப்பிவிட்டு, தானே மாநிலங்களவை செல்ல கெஜ்ரிவால் பிளான் செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. 27 ஆண்டுகளுக்கு பிறகு, தேசிய தலைநகர் டெல்லியை பாஜக கைப்பற்றியது. முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்றுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களே தோல்வி அடைந்தனர். இதனால், டெல்லி சட்டமன்றத்திற்கு போக முடியாத அளவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தள்ளப்பட்டுள்ளார்.

சட்டமன்றத்திற்கு போக முடியாத கெஜ்ரிவால், நாடாளுமன்றத்திற்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சஞ்சீவ் அரோராவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் இறக்கியுள்ளது ஆம் ஆத்மி.

கடந்த மாதம் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது,  தற்செயலாக அந்த துப்பாக்கி சூடப்பட்டு அதிலிருந்து வந்த குண்டு குர்பிரீத் கோகியை பதம் பார்த்தது. அதில், அவர் உயிரிழந்தார்.

அவரின் இறப்பை தொடர்ந்து லூதியானா மேற்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில்தான், ஆம் ஆத்மி சார்பில் எம்பி சஞ்சீவ் அரோரா போட்டியிட உள்ளார். ஏற்கனவே, மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அவர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

எனவே, சஞ்சீவ் அரோராவை எம்எல்ஏ ஆக்கிவிட்டு, தான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக கெஜ்ரிவால் பிளான் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், "இதுபோன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை.  கெஜ்ரிவாலை ஒரு இடத்தில் சுருக்கிவிட விரும்பவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்யசபாவுக்குப் போகவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலைப் பொறுத்தவரை, அவர் பஞ்சாப் முதல்வராக வருவார் என்று ஊடக வட்டாரங்கள் முன்பு கூறி வந்தன. இப்போது, ​​அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்று ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு தகவல்களும் முற்றிலும் தவறானவை. அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். அவரது தேவை மிக அதிகமாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவரை ஒரு இடத்தில் சுருக்கவில்லை" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
Embed widget