மேலும் அறிய

கட்டடத் தொழிலாளர்கள் முதல் பீடித் தொழிலாளர்கள் வரை.. அனைவருக்கும் வீடு.. மத்திய அரசு செம்ம மூவ்!

பிரதமரின் வீட்டுவசதித் திட்ட (PMAY) பலன்களை பின்தங்கிய தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு மத்திய அரசு கடந்த 2015-16 முதல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை (PMAY) செயல்படுத்தி வருகிறது.

PMAY திட்டம் என்றால் என்ன?

தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (PMAY) கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகளின் பிற திட்டங்களுடன் இணைப்பதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் மற்ற அடிப்படை வசதிகளான வீட்டுக் கழிப்பறைகள், எல்பிஜி இணைப்பு, மின்சார இணைப்பு, குழாய் இணைப்பு போன்றவற்றை செய்து தரப்படுகிறது.

நலிவடைந்த தொழிலாளர்களுக்கும் வீடு வழங்க நடவடிக்கை: 

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதற்காக மத்திய அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், பிரதமரின் வீட்டுவசதித் திட்ட (PMAY) பலன்களை பின்தங்கிய தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள், நிலக்கரி அல்லாத சுரங்கத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர்களை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சேர்க்க வலியுறுத்தி, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

தகுதியான பயனாளிகளுக்கு 2 கோடி கூடுதல் வீடுகளை வழங்கும் நோக்கத்துடன், PMAY அமலாக்கத்தை 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 வரை கூடுதலாக ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகளை அங்கீகரிக்கிறது. 

இந்த தொழிலாளர்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது மட்டும் சமூக நீதி அல்ல,  மாறாக அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் நியாயமாக, தகுதியான வீட்டுவசதி மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களைப் பெறுவதை இந்த திட்டம் உறுதி செய்யும்

இதையும் படிக்க: TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
"உங்க கட்சியினரை ஒழுங்கா வச்சுகிட்டா ஏன் வர்றாங்க?" - புதுச்சேரி மேடையில் அதிமுக-வை வாரிச் சுருட்டிய அமைச்சர் ஆனந்த்!
ரத்தக் களறியான அதிமுக கூட்டம்: சி.வி.சண்முகம் - இபிஎஸ் ஆதரவாளர்கள் நடுரோட்டில் பயங்கர மோதல்!
ரத்தக் களறியான அதிமுக கூட்டம்: சி.வி.சண்முகம் - இபிஎஸ் ஆதரவாளர்கள் நடுரோட்டில் பயங்கர மோதல்!
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு
மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
Embed widget