மேலும் அறிய

ஓய்வுபெற்று செல்லும் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு Farewell : பாட்டு பாடி அசத்திய எம்.பி., திருச்சி சிவா

டெல்லி மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தமிழ் பாட்டு பாடி அசத்தினார்.

மாநிலங்களவையில் உறுப்பினர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை எம்.பிகளை சட்ட மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை 34 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கலாம், இதற்கான தேர்தல் என்பது அடிக்கடி நடைபெறாது. மாநிலங்களவை உறுப்பினர்கள் பெரும்பாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் மாநிலங்களவையில் அலங்கரிக்கும் வகையில், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், உள்ளிட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


ஓய்வுபெற்று செல்லும் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு Farewell : பாட்டு பாடி அசத்திய எம்.பி., திருச்சி சிவா

அப்படித்தான் சமீபத்தில் கூட பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் ராஜ்யசபையில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் 72 பேர் இந்த வருடம் மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டங்களில் ஓய்வு பெறுகின்றனர். இதனை முன்னிட்டு அவர்களை வழியனுப்பி வைக்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.

இந்த விழாவை முன்னிட்டு 72 எம்பிக்களும் பிரதமர் மோடி, ராஜ்யசபை சபாநாயகர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய மந்திரிகளும் கலந்து கொண்டு குழு போட்டோ எடுத்து கொண்டனர். இந்த வழியனுப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியபோது, "உறுப்பினர்கள் ஓய்வு பெறும் நிலையில், மீதமுள்ள உறுப்பினர்கள் அவையை முன்னெடுத்து செல்வதில் அவர்களது பொறுப்பு அதிகரித்து உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளின் உணர்வுகள், வலிகள் ஆகியவற்றை மேலவை பிரதிபலிக்கிறது.


ஓய்வுபெற்று செல்லும் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு Farewell : பாட்டு பாடி அசத்திய எம்.பி., திருச்சி சிவா

உறுப்பினர் அவைக்கு அதிகம் பங்காற்றி இருக்கிறார் என்பதும் உண்மை. உறுப்பினர்களுக்கு அவை ஏராளம் அள்ளி தந்திருக்கிறது என்பதும் உண்மை" என்று நெகிழ்ந்து கூறியிருந்தார். ஓய்வு பெற்று செல்லும் ராஜ்யசபை உறுப்பினர்களுக்கு வெங்கையா நாயுடு அன்றைய தினம் இரவு உணவு விருந்து அளித்தார். இதில், 72 எம்பிக்களும் கலந்து கொண்டனர்.

அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில், அவையில் உள்ள 6 உறுப்பினர்களின் இசை கச்சேரி, பாட்டு படித்தல் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. அந்த நிகழ்ச்சிதான் தற்போது சமூக வளைதலங்களில் பேசப்பட்டு வருகிறது. காரணம், எம்பிக்களே மைக்கை பிடித்து பாட்டுக்களை பாடி உள்ளனர்.


ஓய்வுபெற்று செல்லும் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு Farewell : பாட்டு பாடி அசத்திய எம்.பி., திருச்சி சிவா

மாநிலங்களை உறுப்பினர்களான டோலாசென் வந்தனா சவான் உள்ளிட்ட உறுப்பினர்கள் பாட்டு பாடி அசத்திவிட்டனர். அதற்கு பிறகு திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா பாட வந்தார்.திருச்சி சிவாவுக்கு பாட தெரியும் என்ற விஷயமே இந்த நிகழ்வில்தான் பலருக்கு தெரியவந்தது.கொடி மலர் என்ற பழைய படத்தில் வரும் "மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்" என்ற பி.பி. சீனிவாஸ் பாடலை பாடினார்.

அமைதியும், எளிமையும் நிரம்பிய அந்த பாடலை சிவா, இனிமையாக பாடினார். இது ஒரு காதல் பாடலாகும். இந்த பாடலை கேட்டு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்பிகள் கை தட்டி பாராட்டினார்கள். வெங்கையா நாயுடுவுக்கு இந்த பாட்டு மிகவும் பிடித்துவிட்டது போலும். அவரது ட்விட்டர் பக்கத்தில், சிவா பாடிய இந்த பாட்டைதான் பகிர்ந்துள்ளார். வெங்கையா நாயுடு ட்விட்டர் முழுக்க "மௌனமே பார்வையால்"  பாடல் வரிகள் நிரம்பி வழிகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Petrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
Rohit Sharma:
Rohit Sharma: "இன்னும் ஒன்னு மட்டும் பாக்கி இருக்கு.." ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு பெற மறுத்தது ஏன்?
Embed widget