மேலும் அறிய

Sasikala Case : ”சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை” - உயர்நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம்!

கட்சியில் இருந்து சசிகலாவை  நீக்கவோ பொதுக்குழுவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ யாருக்கும் அதிகாரமில்லை என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதங்களை முன்வைத்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலா அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும், டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்பின்பு, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டில் பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இச்சூழலில், தன்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதியரசர்கள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் என். செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று (நவம்பர் 2) விசாரணைக்கு வந்தது.

சசிகலா தரப்பு வாதம்:

அப்போது சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி. ராஜ கோபாலன் ஆஜராகி,” இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலாவை நீக்கியது சட்டவிரோதமானது” என்று கூறினார்.

அப்போது குறிக்கிட்ட நீதியரசர்கள், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி அதிமுகவில் இருக்கிறதா என்றும் அதற்கு விதிகள் உள்ளதா எனவும் கேள்விகளை அடுக்கினர்.

அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர்,” ஜெயலலிதா  மறைவுக்கு பிறகு அதிமுக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். எம்ஜிஆர் இறந்த போது இது போன்ற இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதற்கு பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. கட்சியிலிருந்து சசிகலாவை நீக்கவோ, பொதுக்குழுவில் திருத்தம் செய்யவோ யாருக்கும் அதிகாரமில்லை. பொதுக்குழு மூலம் உறுப்பினர்கள் தான் சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.  

பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்மொழிந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தும் தேர்ந்தெடுத்தனர்” என்ற வாதத்தை முன்வைத்தார்.

பொதுக்குழு முறையாக நடைபெறவில்லை:


அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, “பொதுக்குழுவிற்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் உள்ளது.2665 பொதுக்குழு உறுப்பினர்கள் கூடித்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்.

பொதுச்செயலாளர் துணைப்பொதுச்செயலாளர் தவிர பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லை.  சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது பொதுக்குழு முறையாக நடைபெறவில்லை” என்று வாதிட்டார்.

இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர்கள் வழக்கின் விசாரணையை நாளை (நவம்பர் 3) ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

மேலும் படிக்க: Freedom Fighter Anjalai Amma: தென்னாட்டு ஜான்சி ராணி...அஞ்சலை அம்மாள் சிலையை திறந்து வைத்த முதல்வர்!

 

மேலும் படிக்க: Couple Murder: திருமணமாகி மூன்றே நாட்கள் - காதல் தம்பதி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் கொடூரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget