காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
தன்னுடன் வந்த காதலியை திட்டமிட்டு பனிமலையில் தனியாக தவிக்கவிட்டு, உறைந்து உயிரிழக்கச் செய்த கொடூர காதலனின் சம்பபம் ஆஸ்திரியாவில் அரங்கேறியுள்ளது.

காதலனால் ஏமாற்றப்பட்டு மோசமான முறையில் உயிரிழந்த பெண்ணின் மறைவிற்கு உலகம் முழுவதும் இருந்து இரங்கல்கள் குவிந்து வருகின்றன.
உறைந்து உயிரிழந்த பெண்:
மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு, பனியில் உறைந்து உயிரிழந்த பெண் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 33 வயதான கெர்ஸ்டின் கர்ட்னர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சால்ஸ்பர்க்கைச் சேர்ந்த அந்த பெண் சமூக ஊடகங்களில் தன்னை "குளிர்காலக் குழந்தை" என்றும் "மலையேறும் நபர்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில், கர்ட்னர் ஆஸ்திரியாவின் மிக உயரமான சிகரமான கிராஸ்க்லாக்னரில், அனுபவம் வாய்ந்த வழிகாட்டியான 39 வயதான தனது காதலர் தாமஸ் பிளாம்பெர்கருடன் ஏறியது கர்ட்னரின் கடைசி பயணமாக மாறியுள்ளது.
என்ன நடந்தது?
திட்டமிட்டதை விட இரண்டு மணி நேரம் தாமதமாக இந்த ஜோடி மலையேற்றத்தைத் தொடங்கியது, மேலும் -20°C வரை குறைந்த வெப்பநிலை மற்றும் சூறாவளி காற்று உள்ளிட்ட தீவிர நிலைமைகளை எதிர்கொண்டுள்ளது. கர்ட்னர் சோர்வடைந்து, தாழ்வெப்பநிலைக்கு ஆளாகி, உச்சியை அடைய 150 அடி மட்டுமே இருந்த சூழலில் தன்னிலையை இழந்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது,”அதிகாலை 2 மணியளவில் உதவிக்காகச் செல்ல பிளாம்பெர்கர் கர்ட்னரை பாதுகாப்பற்ற முறையில் விட்டுச் சென்றதாகவும், ஆனால் குளிரில் இருந்து பாதுகாக்க அவசர போர்வைகள் அல்லது பிவோவாக் சாக்கைப் பயன்படுத்தவில்லை என்றும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மீட்பு பணிக்கான உதவிகளை தொடர்பு கொள்ள அவர் மணிக்கணக்கில் காத்திருந்ததாகவும், முதல் அழைப்பிற்குப் பிறகு தனது தொலைபேசியை சைலண்டில் வைத்திருந்ததாகவும், அவரைத் தொடர்புகொள்வதற்கான கூடுதல் முயற்சிகளைத் தவறவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. சில மணிநேரங்களுக்குப் பிறகு ஒரு ஹெட் டார்ச் மட்டுமே மலையின் உச்சியில் நகர்ந்ததை வெப்கேம் படங்கள் படம்பிடித்தன என வழக்கறிஞர்கள் விலக்கியுள்ளனர்.
பனியில் உறைந்து உயிரிழந்த பெண்
மறுநாள் காலை வரை பலத்த காற்று காரணமாக மீட்புக் குழுவினரால் கர்ட்னரை அடைய முடியாத சூழலில், அவரது இருப்பிடத்தை அடைந்த போது அந்த பெண் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து பிளாம்பெர்கர் மீது அலட்சியத்தால் ஏற்பட்ட மனிதக் கொலைக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாமஸ் காதலியைப் போலல்லாமல், ஏற்கனவே உயரமான மலைகளின் மீது ஏறி மிகவும் அனுபவம் வாய்ந்தவராகவும், சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டிருந்தவராகவும் இருந்ததால், அவர் சுற்றுப்பயணத்தின் பொறுப்பான வழிகாட்டியாகக் கருதப்பட வேண்டும் என அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை:
உள்நோக்கத்துடன் தனது காதலியை மலை உச்சியில் தனியாக தவிக்க விட்டாரா? உண்மையிலேயே கடும் பனியாமல் வழிதவறி பிரிந்துவிட்டனரா? என்பன போன்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.





















