![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Couple Murder: திருமணமாகி மூன்றே நாட்கள் - காதல் தம்பதி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் கொடூரம்
Love Couple Murder: தூத்துக்குடியில் திருமணமாகி மூன்று நாட்களே ஆன காதல் ஜோடி வெட்டிக் கொல்லப்பட்டதில், பெண்ணின் பெற்றோருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Couple Murder: திருமணமாகி மூன்றே நாட்கள் - காதல் தம்பதி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் கொடூரம் Three days after marriage Love couple Brutaly murdered in Thoothukudi Couple Murder: திருமணமாகி மூன்றே நாட்கள் - காதல் தம்பதி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் கொடூரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/02/4cc5e5c3f1901e4a040c067449c3f3f61698938753777732_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Love Couple Murder: தூத்துக்குடியில் திருமணமாகி மூன்று நாட்களே ஆன காதல் ஜோடி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த ஜோடியான மாரிச்செல்வம் கார்த்திகா இருவரையும் முருகேசன் நகர் வீட்டில் இருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து கொடூரமாக வெட்டிக்கொலை. கார்த்திகாவின் உறவினர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
நடந்தது என்ன?
தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சார்ந்த வசந்தகுமார் மகன் மாரிசெல்வம்(23) இவர் ஷிப்பிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இவர் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சார்ந்த கார்த்திகா(23) என்ற பெண்னை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு கார்த்திகாவின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 3-நாட்களுக்கு தேவர்ஜெயந்தி அன்று கார்த்திகா வீட்டை விட்டு ஒடி வந்து மாரிசெல்வத்தை திருமணம் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்நிலையில் வீட்டில் இருந்த மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரையும் 3 இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்த சராமரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தினர். இதில் இந்த கொலைகள் ஈடுபட்டது பெண்ணின் உறவினர்கள் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)