மேலும் அறிய

"காங்கிரஸில் நடந்து முடிந்த கூட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை" : பிரஷாந்த் கிஷோர் சொன்னது என்ன?

குஜராத், இமாச்சல் தேர்தலில் படுமோசமான தோல்வியை சந்திக்கும் வரை அது காங்கிரஸ் தலைமைக்கு அவகாசம் வழங்கியுள்ளது

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால், இரு தரப்பிடையே மாற்று கருத்து நிலவியடைதையடுத்து, பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைய மறுத்துவிட்டார் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை, அவரும் ட்விட்டரில் உறுதி செய்தார். இதனை தொடர்ந்து, ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. 2023-ஆம் ஆண்டு வரஇருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் 13ந்தேதி தொடங்கி 15ந்தேதி வரை நடைபெற்றது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் உதய்பூரில் விவாதிக்கப்பட்ட ஆறு விவகாரங்களில் 20முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டு வெளியிடப் பட்டது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட நாடு முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஒடுக்கப்பட்ட மக்களை வலுப்படுத்துவது 50 வயது குறைவானவர்களுக்கு கட்சியில் 50 சதவிகித பதவிகள் ஒதுக்கப்படுவது போன்ற அறிவிப்புகள் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் மாநாடு குறித்து பிரசாந்த் கிஷோரிடம் கருத்து கேட்கப்பட்டுவந்தது. இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அவர், மாநாடு முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

"உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு எந்த விதமான விளைவை ஏற்படுத்தும் என என்னிடம் தொடர்ந்து கருத்து கேட்கப்பட்டுவந்தது. தற்போதிருக்கும் நிலைமை மேலும் தொடர வழிவகுத்ததை தவிர்த்து அந்த அமர்வு வேறு எதுவும் சாதிக்கவில்லை. தோல்வியடைந்துவிட்டது. அது மட்டுமின்றி, குஜராத், இமாச்சல் தேர்தலில் படுமோசமான தோல்வியை சந்திக்கும் வரை அது காங்கிரஸ் தலைமைக்கு அவகாசம் வழங்கியுள்ளது. இதுவே எனது பார்வை" என்றார்.

இதே ஆண்டில், பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே இடையே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இரண்டும் கடைசியில் தோல்வியிலேயே முடிவடைந்தது. பேச்சுவார்த்தையின்போது, காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் வகுத்த தேர்தல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிகாரம் பெற்ற செயற் குழுவின் உறுப்பினராகி கட்சியில் சேர்ந்து பணியாற்றும்படி தலைமை பிரசாந்த் கிஷோரிடம் கேட்டு கொண்டது. ஆனால், அதற்கு அவர் ஒப்பு கொள்ளவில்லை. கட்சியின் விதிகளின்படி, இம்மாதிரியான குழுவுக்கு அதிகாரம் கிடையாது என்றும் அப்படி சேர்ந்தால் இறுதியில் காங்கிரஸின் உட்கட்சி பூசலில் சிக்கிவிடுவேன் எனக் கூறி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
வயிற்றில் உள்ள பிள்ளையை வெட்டி எடுத்தது போல அண்ணாமலை மாற்றினார்கள் - பாஜக முன்னாள் நிர்வாகிகள் ஆவேசம் !
வயிற்றில் உள்ள பிள்ளையை வெட்டி எடுத்தது போல அண்ணாமலை மாற்றினார்கள் - பாஜக முன்னாள் நிர்வாகிகள் ஆவேசம் !
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
Lance Naik Meenatchi Sundaram : ’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர் – யார் இந்த மீனாட்சி சுந்தரம்..?
’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர்..!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
Embed widget