மேலும் அறிய

“புதிய மொழி கற்றால் தமிழ் அழியுமா? தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது” - தமிழிசை சௌந்தரராஜன்

சிலர் நாடாண்டு கொண்டிருக்கையில் அவர்களை சோதனை செய்ய வந்தால் அவர்களுக்கு நெஞ்சு வலியே வந்துவிடுகிறது - ஆளுநர் தமிழிசை

விழுப்புரம் : ”புதிய கல்வி கொள்கை தாய் மொழியை விடுங்கள் என்று கூறவில்லை மற்றொரு மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறது. மற்றொரு மொழியை கற்றுக்கொள்வதால் தமிழ் மொழி அழியாது. தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது” என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் கம்பன் கழகம் சார்பில் மகாராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 40 ஆம் ஆண்டு கம்பன் விழா இன்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. கம்பன் விழாவினை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மேடையில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ”தமிழை போற்றி கொண்டாடியதால் தான் இன்று நான் ஆளுநராக உள்ளேன். தமிழ் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதை கம்பன் வலியுறுத்தி உள்ளார். தமிழும் ஆன்மிகமும் பிரிக்க முடியாது என்பதை கம்ப ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், அரசு எப்படி இருக்க வேண்டும், மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கம்பன் கம்பராமாயணத்தில்  குறிப்பிட்டுள்ளார்” என்றார். 

மேலும், இன்றைய காலகட்டத்தில் சிலர் நாடாண்டு கொண்டிருக்கையில் அவர்களை சோதனை செய்ய வந்தால் அவர்களுக்கு நெஞ்சு வலியே வந்துவிடுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக சாடினார். ”லஞ்சம் ஒழிக்க பட வேண்டும். நேர்மையான நிர்வாகம் இருக்க வேண்டும். அரசாங்கம் எப்படி இருக்க வேண்டுமென கம்பன் வலியுறுத்திறுத்தி உள்ளார். புதிய கல்வி கொள்கை தாய் மொழியை விடுங்கள் என்று கூறவில்லை. மற்றொரு மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறது. கம்பன் வடமொழியை கற்றுக்கொண்டதால் தான் ராமகாவியம் படைக்கப்பட்டுள்ளது. அவர் அதனை கற்றுகொள்ளவில்லை என்றால் கம்ப ராமாயணம் கிடைத்திருக்காது” என கூறினார். 

மற்றொரு மொழியை கற்றுக்கொள்வதால் தமிழ் மொழி அழியாது. தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது என கூறிய அவர், தமிழ் கற்றதினால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னை பெற்றதினால் தமிழ் பேசுவதாக தெரிவித்தார். மேலும் கம்பன் விழாவினை அரசே எடுத்து அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென தமிழிசை செளந்தரராஜன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

தலைப்பு செய்திகள்

"விஜய் அடுத்த பிரதமரா?" ஸ்ரீபெரும்புதூரில் சட்டென பதிலளித்த டி.கே. சிவகுமார்! பரபரப்பு பேட்டி!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Embed widget