மேலும் அறிய

சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாது: எம்.பி தொல். திருமாவளவன் கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம்

சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாது என மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாது என மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடித்தள மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா? என இன்று மக்களவையில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு, எஸ்சி, எஸ்டி பிரிவினரைத் தவிர மற்றவர்களை சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வதில்லை என அதற்கு உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

திருமாவளவன் எழுப்பிய கேள்விகள் விவரம்:

1. அடித்தள மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா? 
2. அப்படியென்றால் அதன் தகவல்கள் விளக்கப்படுமா?
3. அவ்வாறு நடத்தப்படாது என்றாலும் அதற்கான காரணம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்கள்.
கேள்விகள் 1 முதல் 3க்குமான பதில். பட்டியல் இனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள சாதியினர், பழங்குடியினர் தவிர வேறு யாரையும் சாதி வாரியாக கணக்கெடுக்கப் போவதில்லை. அரசியல் சாசன சட்ட உத்தரவு 1950ன் படி பட்டியல்படுத்தப்பட்டுள்ள இனம் மட்டுமே சாதிவாரி கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. சுதந்திர காலம் தொட்டு இதுவே நடைமுறையாக உள்ளது. ஆகையால் இந்திய அரசாங்கமும் எஸ்சி எஸ்டி பிரிவினரைத் தவிர மற்றவர்களை சாதிவாரிக் கணக்குக்கு உட்படுத்தியது இல்லை. சென்சஸ் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனையின்படி திட்டமிட்டு வகுக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும் 2021 சென்சஸின் நோக்கம் என்னவென்பது 2019 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த வேளையில் கொரோனா பெருந்தொற்று வேகமெடுத்ததால் அப்போது மக்கள் தொகை கணக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு மத்திய உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் “சாதிவாரிக் கணக்கெடுப்பு” நடத்தவேண்டும் எனக் கோரி வருகின்றன. 2011-ல் இந்தியா முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு (Socio Economic Caste Census - SECC) எடுக்கப்பட்டது.

அந்தக் கணக்கெடுப்பில் மற்ற விவரங்களை வெளியிட்டுவிட்டு சாதிவாரி மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களை மட்டும் மத்திய அரசு வெளியிடாமல் வைத்துள்ளது என்பது திருமாவளவன் நீண்ட நாட்களாக முன்வைக்கும் வாதம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் அதன் புள்ளிவிவரங்களையும் வெளியிட வேண்டும் என்று அவர் கோரி வந்தார்.

இந்நிலையில், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அவர் முன்வைத்துள்ள கேள்விக்கு உள்துறை அமைச்சகம் இவ்வாறாக எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
Breaking News LIVE, June 5: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Embed widget