மேலும் அறிய

சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாது: எம்.பி தொல். திருமாவளவன் கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம்

சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாது என மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாது என மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடித்தள மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா? என இன்று மக்களவையில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு, எஸ்சி, எஸ்டி பிரிவினரைத் தவிர மற்றவர்களை சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வதில்லை என அதற்கு உள்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

திருமாவளவன் எழுப்பிய கேள்விகள் விவரம்:

1. அடித்தள மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஏதுவாக சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா? 
2. அப்படியென்றால் அதன் தகவல்கள் விளக்கப்படுமா?
3. அவ்வாறு நடத்தப்படாது என்றாலும் அதற்கான காரணம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்கள்.
கேள்விகள் 1 முதல் 3க்குமான பதில். பட்டியல் இனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள சாதியினர், பழங்குடியினர் தவிர வேறு யாரையும் சாதி வாரியாக கணக்கெடுக்கப் போவதில்லை. அரசியல் சாசன சட்ட உத்தரவு 1950ன் படி பட்டியல்படுத்தப்பட்டுள்ள இனம் மட்டுமே சாதிவாரி கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. சுதந்திர காலம் தொட்டு இதுவே நடைமுறையாக உள்ளது. ஆகையால் இந்திய அரசாங்கமும் எஸ்சி எஸ்டி பிரிவினரைத் தவிர மற்றவர்களை சாதிவாரிக் கணக்குக்கு உட்படுத்தியது இல்லை. சென்சஸ் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனையின்படி திட்டமிட்டு வகுக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும் 2021 சென்சஸின் நோக்கம் என்னவென்பது 2019 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த வேளையில் கொரோனா பெருந்தொற்று வேகமெடுத்ததால் அப்போது மக்கள் தொகை கணக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு மத்திய உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் “சாதிவாரிக் கணக்கெடுப்பு” நடத்தவேண்டும் எனக் கோரி வருகின்றன. 2011-ல் இந்தியா முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு (Socio Economic Caste Census - SECC) எடுக்கப்பட்டது.

அந்தக் கணக்கெடுப்பில் மற்ற விவரங்களை வெளியிட்டுவிட்டு சாதிவாரி மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களை மட்டும் மத்திய அரசு வெளியிடாமல் வைத்துள்ளது என்பது திருமாவளவன் நீண்ட நாட்களாக முன்வைக்கும் வாதம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் அதன் புள்ளிவிவரங்களையும் வெளியிட வேண்டும் என்று அவர் கோரி வந்தார்.

இந்நிலையில், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அவர் முன்வைத்துள்ள கேள்விக்கு உள்துறை அமைச்சகம் இவ்வாறாக எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Top 10 News Headlines: தங்கம் விலை சரிவு, 112 ஏர் இந்தியா விமானிகள் விடுவிப்பு, இங்கிலாந்து மன்னரை சநதித்த மோடி - 11 மணி செய்திகள்
தங்கம் விலை சரிவு, 112 ஏர் இந்தியா விமானிகள் விடுவிப்பு, இங்கிலாந்து மன்னரை சநதித்த மோடி - 11 மணி செய்திகள்
Toyotas Creta Rival: சின்ன பசங்க ஒதுங்குங்க, க்ரேட்டாவா நா அடிக்கிறேன்! டொயோட்டாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி
Toyotas Creta Rival: சின்ன பசங்க ஒதுங்குங்க, க்ரேட்டாவா நா அடிக்கிறேன்! டொயோட்டாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE
விஜய் போட்டோவை மிதித்த தவெகவினர் களேபரமான பொதுக்கூட்டம் பாதியிலேயே கிளம்பிய புஸ்ஸி | Bussy Anand | Vijay | TN Politics
Operation Sindoor தாக்குதல் ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பாரா மோடி?
Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Top 10 News Headlines: தங்கம் விலை சரிவு, 112 ஏர் இந்தியா விமானிகள் விடுவிப்பு, இங்கிலாந்து மன்னரை சநதித்த மோடி - 11 மணி செய்திகள்
தங்கம் விலை சரிவு, 112 ஏர் இந்தியா விமானிகள் விடுவிப்பு, இங்கிலாந்து மன்னரை சநதித்த மோடி - 11 மணி செய்திகள்
Toyotas Creta Rival: சின்ன பசங்க ஒதுங்குங்க, க்ரேட்டாவா நா அடிக்கிறேன்! டொயோட்டாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி
Toyotas Creta Rival: சின்ன பசங்க ஒதுங்குங்க, க்ரேட்டாவா நா அடிக்கிறேன்! டொயோட்டாவின் புது காம்பேக்ட் எஸ்யுவி
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
Embed widget