மேலும் அறிய

'தமிழகத்தை திராவிடமாடல் மட்டும் தான் ஆட்சி செய்யமுடியும்' - அமைச்சர் கே.என்.நேரு

தமிழக முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ? அவர்தான் பிரதமராக அமரப்போகிறார் என்றும் தயாநிதிமாறன் உரையாற்றினார்.

சேலம் மாநகர் குரங்குசாவடி பகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றினர்.

தமிழகத்தை திராவிடமாடல் மட்டும் தான் ஆட்சி செய்யமுடியும்' - அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பெருமளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சவால்விட்டு பேசினார். ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் திராவிட மாடல் காலாவதியான கோஷம் என ஆளுநர் பேசிவருகிறார். ஆனால் தமிழகத்தை திராவிட மாடல் மட்டும் தான் ஆட்சி செய்ய முடியும். அடுத்த முறையும் திமுக தலைவர் ஸ்டாலின் தான் ஆட்சி அமைப்பார் என உறுதிப்பட தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசியவர், விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம், மாநிலத்திற்கு என தனிகல்வி கொள்கை உள்ளிட்ட என பல்வேறு திமுக செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசிய அவர், அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே படித்துவிட்டு வேலை இல்லாதவர்களுக்கு அரசு பணி இதன் மூலம் படிப்படியாக கிடைக்கும் என்று கூறினார். சேலத்தில் ஜவுளி பூங்கா வேண்டும் என 20 ஆண்டு காலமாக இருந்து வந்த நிலையில் தற்போது 200 கோடி ரூபாய் செலவில் கொண்டுவரப்பட உள்ளது. மேலும் 540 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டமும், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கும் திட்டமும், திருமணிமுத்தாற்றை திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.சேலம் மாவட்டத்தை மீண்டும் திமுகவின் கோட்டையாக மாற்றுவோம் வீரபாண்டிய காலத்தில் எப்படி திமுக இயக்கம் இருந்ததோ வருங்காலத்தில் முக்காவாசி சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவினராக வருவார்கள் எனவும் உறுதிப்பட பேசினார்.

 தமிழகத்தை திராவிடமாடல் மட்டும் தான் ஆட்சி செய்யமுடியும்' - அமைச்சர் கே.என்.நேரு

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உரையாற்றினார். அப்போது பேசியது, திராவிட மாடல் ஆட்சி என்பது சொல்வதை செய்வது மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்வதுதான் திராவிட மாடலா ஆட்சி,அதைதான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். இதுபலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் இந்த ஆட்சியின் மீது ஏதாவது ஒரு புரளியை கிளப்பிவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழக முதல்வர் ஆட்சி அமைத்தபோது தமிழகத்தில் கடுமையான கடுமையான கொரோனா பாதிப்பு இருந்தது. அப்போது விலையில்லா தடுப்பூசி கொடுத்து கொரோனாவில் இருந்து மக்களை தமிழக முதல்வர் பாதுகாத்தார். கொரோனாவால் வேலை இழந்து நின்ற நிலையில் குடும்பத்திற்கு நான்காயிரம் வழங்கினார் என்று கூறிய தயாநிதி மாறன், திராவிட திராவிட மாடல் ஆட்சிக்கும், பாஜக ஆட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. 2019 ஜனவரி மாதம் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஒரே ஒரு செங்கலை மட்டும் வைத்துவிட்டு சென்றனர். இதுவரை எந்த கட்டிடமும் கட்டப்படவில்லை இதுதான் சனாதானா ஆட்சி. ஆனால் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் என்று பெருமிதத்துடன் கூறினார். இதைதொடர்ந்து கூறியவர் பாஜக ஆட்சி பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலின்போது இலவசம் கொடுத்து நாடு கெட்டுவிட்டது, இலவசத்தால் மக்களைக் கெடுத்துவிட்டன என பிரதமர் மோடி பேசினார். இந்தியாவில் இலவசம் கூடாது இலவசத்தை ஆதரிக்கமாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். தற்போது கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜகவினர் மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக தருவதாகவும், மக்களுக்கு 2000 தருவதாகவும் வாக்குறுதிகளை வீசி வருகின்றனர் என்று விமர்சனம் செய்தார். அப்போது வடிவேலு பாணியில் அது வேற வாய், இது நாற வாய் என்று கிண்டலடித்தார். நாம் கொடுத்தால் இலவசம் ஆனால் பாஜக கொடுத்தால் மக்கள் நலனா என கேள்வி எழுப்பினார். தமிழகம் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பிறந்த மண், முதல்வர் ஸ்டாலின் ஆளுகின்ற மண் இங்கு யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றார் உயர்ந்த ஜாதியினர் மட்டும்தான் படிக்க வேண்டும், முன்வர முன்னுக்கு வரவேண்டும் என்பது தமிழகத்தில் நடக்காது ஏனென்றால் பெரியார், அண்ணா, கருணாநிதி பிறந்த மண் இது பெருமிதம் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் பிரதமராக அமரப் போகிறார் என்றும் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
CV Shanmugam: பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி...  ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி... ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
Peculiar Case on Rahul; ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்! முதல் நாளே அதிரடி உத்தரவு! ஷாக்கில் இந்தியாRK Nagar Police Station Arson  அலட்சியம் செய்த போலீஸ்? இளைஞர் தீக்குளிப்பு காவல் நிலைய முன் பயங்கரம்Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
CV Shanmugam: பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி...  ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி... ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
Peculiar Case on Rahul; ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
Minister Ma. Subramanian: தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் 2,553 புதிய மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் 2,553 புதிய மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Schools Leave: எதிர்பார்க்கலைல்ல?  பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
Schools Leave: எதிர்பார்க்கலைல்ல?  பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
Job Fair: படிச்சிட்டு வேலை இல்லையா? இத பண்ணுங்க..  வேலைவாய்ப்பு முகாம் - எப்போது? எங்கே?
படிச்சிட்டு வேலை இல்லையா? இத பண்ணுங்க.. வேலைவாய்ப்பு முகாம் - எப்போது? எங்கே?
HBD Sundar C: சிரிக்க வைக்கும் சிற்பி! தமிழ் சினிமாவின் மதகஜராஜா சுந்தர்.சிக்கு பிறந்தநாள்!
HBD Sundar C: சிரிக்க வைக்கும் சிற்பி! தமிழ் சினிமாவின் மதகஜராஜா சுந்தர்.சிக்கு பிறந்தநாள்!
Embed widget