மேலும் அறிய

"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்

பெரியார் குறித்து அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

திராவிட கட்சிகளின் வழிகாட்டியாக திகழும் பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பெரும் சர்ச்சையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. மேலும்,  சீமானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கைது செய்ய வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

பிறப்பைச் சந்தேகப்படுகிறேன்

இந்த நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

கேள்வி: ஆளுநர் முதலமைச்சருக்கு இருக்கும் ஆணவம் சரியில்லை என்று கூறியிருக்கிறாரே?

பதில்: மரபு அது அல்ல. இத்தனை ஆண்டுகாலமாக முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்பட்டு வந்தது. அந்த மரபை மாற்றச் சொன்னவர் அவர்தான். தவறு செய்தவர் அவர்தான். அவர் முதலமைச்சரைப் பார்த்து ஆணவம் என்கிறார். அவருக்கு கவர்னர் என்ற திமிர் உள்ளது. 

கேள்வி: பெரியார் எந்த சமுதாயத்திற்கு நல்லது செய்தார்? என்ன புரட்சி செய்தார்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

பதில்: பெரியார் பற்றி அவதூறாக பேசுபவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிேறன். 

கேள்வி: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மட்டுமே களத்தில் உள்ளது. அது பற்றி உங்கள் கருத்து?

பதில்: அனைவரும் புறக்கணித்து விட்டார்கள். அவ்வளவு பலமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

இவ்வாறு அவர் கூறினார். 

பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு:

பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வரும் சூழலில், அமைச்சர் சீமானை மறைமுகமாக குறிப்பிட்டு அவரது பிறப்பையே சந்தேகப்படுகிறேன் என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று இதற்கு விளக்கம் அளித்த சீமான் அம்பேத்கர் சிந்தனையும், பெரியாரின் சிந்தனையும் ஒன்றா? என கேள்வி எழுப்பினார். மேலும், பெரியார் எந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். பெரியாருக்கு இனமே கிடையாது என்றும் சீமான் பேசினார். 

ஆளுநர் - தமிழக அரசு மோதல் போக்கு

மேலும், சட்டசபைக் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையைப் படிக்காமலே சென்ற பிறகு, தேசிய கீதம் முதலில் இசைக்கப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதலமைச்சருக்கு அகங்காரம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு இல்லாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் ஆளுநர் - தமிழக அரசு மோதல் போக்கு தொடங்கியுள்ளது. 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhampatty Rangaraj: பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு மனைவி.. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
Madhampatty Rangaraj: பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு மனைவி.. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
Embed widget