மேலும் அறிய

Durai Vaiko : “திமுகவிற்கும் மதிமுகவிற்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி” கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்..!

MDMK : "கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரிடமும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடனும், நல்ல நட்போடும் புரிதலோடுமே துரை வைகோ பயணித்து வருகிறார்"

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் துரை வைகோ போட்டி என அறிவிக்கப்பட்டதிலிருந்து திமுகவிற்கு மதிமுகவிற்கும் இடையே அனுதினமும் பிரச்னை இருப்பதாக சிலர் கிளப்பிவிட, தீப்பெட்டியில் உராயும் தீக்குச்சிப்போல் தகித்து கிடக்கிறார்கள் மதிமுக தொண்டர்கள்.

வைகோவுடன் - துரை வைகோ
வைகோவுடன் - துரை வைகோ

ஆதங்கமும் கண்ணீரும்

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று ஆதங்கமாக பேசி அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் முன்னிலையிலேயே கண்ணீர் வடித்தார் துரை வைகோ. அன்றிலிருந்து துரை வைகோவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி, திமுக அழுத்தம் கொடுக்கிறது, அவருக்கு திமுக நிர்வாகிகள் யாரும் திருச்சியில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பது மாதிரியான செய்திகள் உலா வரத் தொடங்கின. ஒரு கட்டத்தில், துரை வைகோவிற்கும் திமுகவிற்கும் இடையே நெருடல் ஏற்பட்டுள்ளது என்று கூட தகவல்கள் கச்சைக் கட்டி பறந்தன.

அமைச்சர் நேருவுடன் துரை வைகோ
அமைச்சர் நேருவுடன் துரை வைகோ

”துரை வைகோவிற்கு எதிராக சதி - கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்”

மதிமுகவிற்கும் பம்பரம் சின்னம் கிடைக்காமல் தீப்பெட்டி சின்னம் கிடைத்த நிலையில், துரை வைகோ வெற்றியே திருச்சியில் கேள்விகுறியாகும் என்பதுபோல் சிலர் கிளப்பிவிட, திமுகவினரே சற்று அதிர்ந்துதான் போயினர். ஆனால், துரை வைகோவின் அணுகுமுறையால் திருச்சியில் அப்படி எந்த பிரச்னையும் எழவில்லை. கே.என்.நேரு அவரை சரியாக நடத்தவில்லை என்று சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பும் தொடர்பும் கட்சியை தாண்டியது என்பது அவர்கள் இருவருமே நன்றாக அறிவர். அதனால்தான், தேர்தல் வேலைகள் திருச்சியில் சுனக்கம் இன்றி நடந்தது.Durai Vaiko : “திமுகவிற்கும் மதிமுகவிற்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி” கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்..!

”தலைமைக்கு போன் மேல் போன் போட்ட தொண்டர்கள் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மதிமுக”

ஆனால், திருச்சி பிரச்னையை தலைநகர் சென்னை வரை சிலர் கடத்தி வந்து மதிமுக தலைமைக்கும் திமுக தலைமைக்கும் இடையே பெரிய பிரச்னை வெடித்துள்ளது, தேர்தலுக்கு பிறகு இரண்டு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் பிளவு ஏற்பட போகிறது என்ற ரேஞ்சுக்கு செய்திகளை கசியவிட்டார்கள். ஒவ்வொருநாளும், சில நாளேடுகள் கூட மதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையே இருக்கும் பிரச்னை பூதாகரமாகிவருகிறது என்பது போன்ற செய்திகளை வெளியிட, மதிமுக தொண்டர்களோ இது உண்மையாக இருக்குமோ என நினைத்து தலைமைக்கு போன் மேல் போன் போடத் தொடங்கினர்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. திமுகவிற்கும் – மதிமுகவிற்கு இடையே உறவு சுமூகமாகதான் இருக்கிறது என அவர்கள் விளக்கமளித்த பின்னர், இப்படியான வதந்திகளை பரப்புவோர் மீது தொண்டர்களின் கோபம் திரும்பியுள்ளது என்கிறார்கள் மதிமுக நிர்வாகிகள்.Durai Vaiko : “திமுகவிற்கும் மதிமுகவிற்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி” கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்..!

”மதிமுகவின் எதிர்காலமான துரை வைகோ”

இனி மதிமுகவின் எதிர்காலம் துரை வைகோதான் என்று ஆகிவிட்ட நிலையில், அவரின் வளர்ச்சியை பிடிக்காதவர்களும், அவரின் செயல்பாடுகளால் கட்சி புது தெம்பை பெற்றுவிடுமோ என்று அஞ்சுபவர்களும் இதுபோன்ற வேலைகளை பார்ப்பதாக மதிமுக தலைமை நினைக்கிறது. இதில் இன்னும் சொல்ல வேண்டுமானால், மதிமுகவில் இருந்து வெளியேறிய சிலரே இதுபோன்ற அவதூறுகளை கட்சியை நோக்கி வீசுவதுதான் மதிமுக தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுகவோடு மதிமுகவை வைகோ இணைக்கப் போகிறார் என்ற புரளி சில மாதங்களுக்கு முன்னர் பரப்பப்பட்டது. இப்போது பாஜகவோடு மதிமுக தலைமை நெருக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறது என்ற புதிய வகையில் ஒரு உருட்டை மதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என மதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூறி, அவர்களுக்கு எதிரான கொதி மனநிலையில் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரிடமும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடனும், நல்ல நட்போடும் புரிதலோடுமே துரை வைகோ பயணித்து வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Embed widget