மேலும் அறிய

இளைஞர்கள் எப்படி விஜயை ஏற்றுக்கொள்வார்கள்..? காரணங்களை அடுக்கிய கே.பாலகிருஷ்ணன்

மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த சி.பி.ஐ.எம். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் விஜய் குறித்து கடும் விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் திரைக் கலைஞர்களுக்கு மக்கள் மத்தியில் கூட்டம் கூடுவது இயல்பானதுதான் என்றும், ஆனால் த.வெ.க. தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்பது தேர்தலுக்குப் பின்னரே தெரிய வரும் என்றும் சி.பி.ஐ.எம். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், அவர் எந்த ஆக்கபூர்வமான கொள்கைகளையும் முன்வைக்கவில்லை என்றும், முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காதல் விவகாரத்தில் நடைபெற்ற கொலை 

மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலத்தில் காதல் விவகாரத்தில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சிந்தன் மற்றும் பல நிர்வாகிகள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன் கூறியதாவது:


இளைஞர்கள் எப்படி விஜயை ஏற்றுக்கொள்வார்கள்..? காரணங்களை அடுக்கிய கே.பாலகிருஷ்ணன்

வெட்கித் தலைகுனியக்கூடிய ஒரு சம்பவம்

"காதல் விவகாரத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் அவர்களுக்குத் துணையாகவும், வழக்கு நடத்துவதற்குப் பக்கபலமாகவும் இருக்கும் என்று உறுதியளித்துள்ளோம். இது மிகவும் வெட்கித் தலைகுனியக்கூடிய ஒரு சம்பவம். நீண்ட காலமாகச் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் டெல்டா பகுதியில், காதல் திருமணத்திற்கு எதிராகப் பெண்ணின் உடன் பிறந்தவர்களே கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். "கொலைச் சம்பவத்திற்கு முன்னதாக அப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.


இளைஞர்கள் எப்படி விஜயை ஏற்றுக்கொள்வார்கள்..? காரணங்களை அடுக்கிய கே.பாலகிருஷ்ணன்

உடனே சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்

இதுபோன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க, ஆணவப் படுகொலைக்கு எதிரான தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொலைக்கு நேரடியாகத் தொடர்புடையவர்கள் மட்டுமல்ல, அதற்குத் தூண்டுதலாகவும், பின்புலமாகவும் இருந்த பல்வேறு சாதிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தச் சட்டம் தேவை என நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வளவு கோரிக்கைகளுக்குப் பிறகும் தமிழக அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. உடனடியாக தமிழக அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்."


இளைஞர்கள் எப்படி விஜயை ஏற்றுக்கொள்வார்கள்..? காரணங்களை அடுக்கிய கே.பாலகிருஷ்ணன்

முழுமையான விசாரணை 

"மயிலாடுதுறையில் பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், இதுபோன்ற காதல் திருமணங்களைத் தடுப்பவர்களுக்கு எதிராக எல்லா ஜனநாயக அமைப்புகளும் குரல் எழுப்ப வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெற்றோர், தங்கள் மகளின் திருமணத்திற்கு எதிராக இருந்தது என்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர்களுக்குப் பின்னால் இருந்து வேறு யாரோ இதை ஊக்குவித்திருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் சந்தேகம். இதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும்."


இளைஞர்கள் எப்படி விஜயை ஏற்றுக்கொள்வார்கள்..? காரணங்களை அடுக்கிய கே.பாலகிருஷ்ணன்

த.வெ.க. தலைவர் விஜய்

த.வெ.க. தலைவர் விஜய் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பாலகிருஷ்ணன், "இந்தியாவில் திரைக் கலைஞர்களுக்கு மக்கள் மத்தியில் கூட்டம் கூடுவது இயல்புதான். அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. ஆனால், அந்தக் கூட்டம் வாக்குகளாக மாறுமா இல்லையா என்பது தேர்தலுக்குப் பின்னரே தெரியும். அவர் எந்தவொரு ஆக்கபூர்வமான கொள்கையையும் சொல்லவில்லை. உலகில் காசாவில் பெரிய அளவில் இனப்படுகொலை நடைபெறுகிறது. மத்திய அரசின் பல்வேறு மோசமான நடவடிக்கைகள் உள்ளன. ஆனால் இவை பற்றியெல்லாம் அவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. சினிமாவில் வசனம் பேசுவதுபோலவே பேசுகிறார். அரசியல் விழிப்புணர்வுடன் உள்ள இளைஞர்கள் எப்படி இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை" என்றார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Embed widget