மேலும் அறிய

ABP Nadu Exclusive: : ’நமது அம்மா அதிமுக பேப்பரே இல்லை’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ் ஆவேச பேட்டி..!

’ஜெயலலிதா யாரை ஆதரித்தார், அவருடைய உள் உணர்வு என்ன சொல்லும் என்பதை அருகில் இருந்து பார்த்தவன் நான். அதன்படி, எது தர்மமோ, எது நியாயமோ அதன் பக்கம், அவர்கள் பக்கம் நிற்பேன்’

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகரமாகி, இரட்டையர்கள், இரட்டை குழல் துப்பாக்கி போன்றவர்கள், தேரின் இரண்டு சக்கரங்களை போல அதிமுகவை அழைத்து செல்பவர்கள் என புகழப்பட்ட ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தற்போது தனித் தனியாக பிரிந்து தலைமை யுத்தம் செய்துக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தடாலடியாக அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவுடன் மருது அழகுராஜ்
ஜெயலலிதாவுடன் மருது அழகுராஜ்

இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள மருது அழகுராஜ் "நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவரை தொடர்புகொண்டு நாம் பேசினோம்.ABP Nadu Exclusive: :  ’நமது அம்மா அதிமுக பேப்பரே இல்லை’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ் ஆவேச பேட்டி..!

கேள்வி : நமது அம்மா ஆசிரியர் பொறுப்பில் இருந்து திடீரென விலக என்ன காரணம் ?

மருது அழகுராஜ் : ஓபிஎஸ் – ஈபிஎஸ் என்ற இரண்டு தலைவர்களின் தலைமையை ஏற்றுதான் நமது அம்மா ஆசிரியராக நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி ‘நமது எம்.ஜி.ஆர்’ ஆசிரியராக 11 ஆண்டுகள் பணியாற்றினேன். அவரது மறைவுக்கு பிறகு பத்திரிகை பணியில் இருந்து விடைபெற்றுவிடலாம் என்று முடிவு செய்திருந்த நிலையில், ‘நமது அம்மா’ என்ற பத்திரிகையை தொடங்கி, என்னை ஆசிரியராக இருக்க கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்களின் இரட்டை தலைமையை ஏற்றுக்கொண்டுதான் ஆசிரியர் பொறுப்பில் தொடர்ந்தேன். ஆனால், இன்று அதிமுக மீண்டும் ஒரு பிளவை நோக்கி செல்வதை நான் உணருகிறேன், அதனால் இந்த ஆசிரியர் பொறுப்பில் இருந்து நான் விலகுவதாக முடிவெடுத்து அறிவித்துள்ளேன்.

கேள்வி : உங்க டிவிட்டர் பதிவில் ‘சுயநலத்தால் நம்பிக்கை தகர்ந்துவிட்டது’ என்று குறிப்பிட்டு இருக்கீங்களே, யாருடைய சுயநலத்தால் உங்கள் நம்பிக்கை தகர்ந்துவிட்டது ?

மருது அழகுராஜ் : இப்போது ஏற்பட்டிருக்கும் பிளவுக்கு யார் காரணமோ, எது காரணமோ அதுதான் சுய நலம் என்று சொல்கிறேன். ஏனென்றால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் ஒற்றை வாக்கு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது. ஆனால்,’கல்யாணத்தை செய்துவிட்டு அடுத்த வாரமே டைவர்ஸ் செய்வது மாதிரி’ பிரச்னை ஏற்பட்டு பிரிவை நோக்கி செல்கிறார்கள். அதனால், இந்த பொறுப்பில் நீடிக்க முடியாது என்று நினைத்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

கேள்வி : சுயநலம் என்று சொல்கின்றீர்களே அது யாரை ? எடப்பாடி பழனிசாமியையா ? இல்லை ஒ.பன்னீர்செல்வத்தையா ?

மருது அழகுராஜ் : நான் அதைதான் திருப்பி திருப்பி சொல்கிறேன். இப்போதைய பிளவுக்கு யார் காரணமோ ? அதிமுக பிளவுபடவேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவரைதான் குறிப்பிடுகிறேன்.

கேள்வி : ஓபிஎஸ் – ஈபிஎஸ் இப்போது இரண்டாக பிரிந்துவிட்ட நிலையில், உங்களுடைய ஆதரவு என்பது யாருக்கு இருக்கும் ?

மருது அழகுராஜ் : அதிமுகவிற்காக என் உயிரையே ஒப்படைத்து, இரவும் பகலுமாக எழுதியிருக்கிறேன். என்னுடைய எழுத்து, பேச்சு என அத்தனையும் அதிமுகவிற்கானதுதான். அதற்காக என்னை ஆராதிக்கக் கூடிய, என்னை நேசிக்க கூடிய, என்னை ஊக்கப்படுத்தக் கூடிய நண்பர்களும், கட்சி நிர்வாகிகளும் நிறைய பேர் இருக்காங்க. அவர்களிடம் கலந்துபேசி என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை அறிவிப்பேன்.

எது நியாயமோ, எது தர்மமோ அதன் பக்கம் நிற்பேன். புரட்சித் தலைவி அம்மா யாரை விரும்புவார்கள், அவருடைய உள்ளம் என்ன சொல்லும் என்பதையெல்லாம் நான் அருகில் இருந்து பார்த்தவன். அதன்படி நான் முடிவு எடுப்பேன்.

ABP Nadu Exclusive: :  ’நமது அம்மா அதிமுக பேப்பரே இல்லை’ ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய மருது அழகுராஜ் ஆவேச பேட்டி..!

கேள்வி : நமது அம்மா நாளேடு நிறுவனர்களில் ஓபிஎஸ் பெயரை நீக்கியிருக்கிறார்கள். அது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதா ? உங்களிடம் கேட்டுதான் முடிவு செய்தார்களா ?

மருது அழகுராஜ் : கடந்த சில மாதங்களாகவே ஆசிரியர் என்ற அடிப்படையில் கூட பேப்பரில் வரக்கூடிய விஷயங்கள் குறித்து எனக்கு தெரியப்படுத்தப்படுவது இல்லை. நடைமுறைகளையெல்லாம் மாற்றினார்கள். ஆனால், விலவிவிடக்கூடாது என்று என்னால் முடிந்த அளவுக்கு சகித்து போனேன். ஆனால், இப்போது அது முடியாமல்தான் இந்த விலகல் முடிவை எடுத்து அறிவித்திருக்கிறேன்.

நமது அம்மாவிற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை என பேர் வைத்திருந்தோமே தவிர, அது அப்படி செயல்படவில்லை. என்னை பொறுத்தவரை நமது அம்மா நாளேடு என்பது ஒரு தத்துப்பிள்ளைதான். சும்மா சொல்லிக்கிட்டோமே தவிர, அது அதிமுகவின் பத்திரிகையாக இல்லை என்பதுதான் எனது கருத்து.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா...  'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!Palanivel Thiaga Rajan | ”ஜெ. அம்மா கூட  இத செய்யல”கும்பிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் மாஸ் காட்டிய PTR!2026 Election Survey | அதிமுக, பாஜக WASTE கிங்மேக்கர் விஜய்! சர்வேயில் மெகா ட்விஸ்ட் | TVK VijayTVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | Gingee

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா?  Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
மோடிக்கு எலான் மஸ்க் கொடுத்த பரிசு..பதிலுக்கு அவரின் குழந்தைகளுக்கு மோடி கொடுத்தது என்ன?
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Chennai Power Shutdown: சென்னையில் நாளை ( 15.02.2025 ) மின்தடை: முகப்பேர், பட்டாபிராம்...
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா...  'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
பெரியார் சிலை அருகே நாம் தமிழர் பொதுக்கூட்டம் - அனுமதி வழங்கியதா நீதிமன்றம்?
Stalin Reply to Annamalai: அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட எவராலும் அசைக்க முடியாது..அண்ணாமலைக்கு ஸ்டாலின் பதிலடி..
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
Jio Hotstar Merger: ஜியோ வசமான ஹாட்ஸ்டார்! புதிய கட்டணம் என்ன தெரியுமா? 3 ப்ளானின் முழு விவரம்!
Trichy-Bahrain Flight:  திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? -  விரைவில் வருதாம் புதிய விமான சேவை
திருச்சி மக்களே... பறக்க நீங்க ரெடியா...? - விரைவில் வருதாம் புதிய விமான சேவை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.