மேலும் அறிய

'பிற மொழியை கற்பதால் தமிழ் எந்த வகையிலும் கரைந்துவிடாது' - ஆளுநர் தமிழிசை

பிற மொழியை கற்பதால் தமிழ் எந்த வகையிலும் கரைந்துவிடாது என்று புதுவை ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார்.

பிற மொழியை கற்பதால் தமிழ் எந்தவிதத்திலும் கரைந்து விடாது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 55-ம் ஆண்டு கம்பன் விழா நேற்று காலை தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் இந்த விழா நடக்கிறது. தொடக்க விழாவுக்கு உச்சநீதிமன்ற ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார். கம்பன் கழக புரவலரான முதலமைச்சர் ரங்கசாமி வரவேற்றுப் பேசினார்.

விழாவை தொடங்கி வைத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்  பேசியதாவது:-

தமிழை பெயரில் மட்டுமல்லாது உயிரிலும் கொண்டவள் நான். கம்பன் விழா மேடையில் ஏறியவர்கள் உச்சத்தை அடைவார்கள் என்று நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார். அவர் உச்சநீதிமன்றத்தில் உச்சத்தை அடைவார் என்பதில் சந்தேகம் இல்லை. எத்தனை சாமிகள் வந்தாலும் இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி இருப்பது தான் சிறப்பு. இங்கு கம்பன் கழகம் தொடங்கப்பட்டு 55 ஆண்டுகள் ஆகிறது. தமிழகத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு கம்பன் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழாக இருந்தாலும், சுதந்திர போராட்டமாக இருந்தாலும் பலரும் புதுச்சேரிக்கு வந்து சிறப்படைந்து இருக்கிறார்கள். துன்பப்படும் போது தாய் மடியை போல புதுச்சேரி விளங்குகிறது.


பிற மொழியை கற்பதால் தமிழ் எந்த வகையிலும் கரைந்துவிடாது' - ஆளுநர் தமிழிசை

ராமாயணத்தில் சொல்லப்பட்ட நல்லாட்சி புதுச்சேரியில் நடக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமியும் அவரது அமைச்சர்களும் சிறப்பான அரசை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கம்பன், ராம அவதாரத்தை தமிழில் எழுத நினைத்தார். அதற்கு முதலில் வடமொழியை கற்று வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுதினார். பிற மொழியை கற்பதால் தமிழ் எந்த வகையிலும் கரைந்துவிடாது. தமிழை உலகிற்கு உணர்த்த வேண்டும். எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்களை கொண்டு வந்து சேர்ப்பீர் என்றார் பாரதியார். தாய்மொழி நமக்கு உயிர். அதை சரியாக படிக்காமல் பிற மொழியை நிந்திப்பது மொழிப்பற்று ஆகிவிடாது. தாய்மொழியில் வளம்பெற்று பக்கபலமாக இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைதான் புதிய கல்விக்கொள்கை கூறுகிறது.

புதுவை அரசுக்கு தமிழ்ப்பற்று குறித்து யாரும் சொல்லித்தர தேவையில்லை. தமிழ் இங்கு விளையாடிக்கொண்டுள்ளது. ஜிப்மர் இயக்குனர் சுற்றறிக்கையை அரசியலாக்கி பலர் தினமும் போராட்டம் நடத்துவது நோயாளிகளுக்கு தொந்தரவாக இருக்கிறது. எந்த விதத்திலும் தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுவை அரசு ஒப்புக்கொள்ளாது என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.


பிற மொழியை கற்பதால் தமிழ் எந்த வகையிலும் கரைந்துவிடாது' - ஆளுநர் தமிழிசை

நீதிபதி ராமசுப்ரமணியன் பேசியதாவது:-

புதுவையில் அரசியல் வேறுபாடுகள் தவிர்த்து யார் முதலமைச்சராக உள்ளனரோ அவர்கள் கம்பன் கழக புரவலராக உள்ளனர். இது தமிழுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. இந்த ஆண்டு தமிழ் பேசும் கவர்னர் தொடக்க உரையாற்றி உள்ளார். இந்த கம்பன் விழா மேடையானது எல்லோரையும் ஏற்றிவிடும் ஏணி. நான் 1983-ம் ஆண்டு வக்கீலாக வந்து இந்த விழாவில் பேசினேன். அதன்பின் பின் உயர் நீதிமன்ற நீதிபதி, இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக வந்துள்ளேன். புதுச்சேரி மேடை என்பது ஏற்றிவிடும் மேடை.

இதை குறிப்பாக மேடையில் உள்ள ஒருவருக்கு சொல்கிறேன். இதை புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும். புரியாதவர்கள் அப்படியே இருக்கட்டும். புதுவையில் கம்பன் விழா 3 நாட்கள் முழுவதும் நடக்கிறது. பல இடங்களில் இதுபடிப்படியாக குறைந்து அரை நாட்களாக மாறிவிட்டது. நாம் கம்பனை ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம். அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வதால் கம்பனை கொண்டாடுகிறோம் என நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.

தலைப்பு செய்திகள்

"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
மேடையில் யாருமில்லை: அப்செட் ஆன அமைச்சர் நிர்மல்குமார் புறப்பட்டதால் பரபரப்பு!
மேடையில் யாருமில்லை: அப்செட் ஆன அமைச்சர் நிர்மல்குமார் புறப்பட்டதால் பரபரப்பு!
தமிழ்நாட்டிலோ எவ்வளவு காசு கொடுத்து எந்த எம்.எல்.ஏ-க்களை வாங்கலாம், யாரைக் கூட்டு வரலாம் என்ற கேவலமான பேரம் நடந்து கொண்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.
தமிழ்நாட்டிலோ எவ்வளவு காசு கொடுத்து எந்த எம்.எல்.ஏ-க்களை வாங்கலாம், யாரைக் கூட்டு வரலாம் என்ற கேவலமான பேரம் நடந்து கொண்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Hyundai Cheapest EV: செம்ம ஆஃபர்... ஹூண்டாய் க்ரெட்டா இவி அறிமுகம்- ஒரே சார்ஜில் 500 கிமீ- ரூ.11 லட்சத்துக்கும் கீழே!
Embed widget