![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கரும்புள்ளியாக உள்ள ஓபிஎஸ்; ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை - சி.வி.சண்முகம்
கரும்புள்ளியாக உள்ள ஓ. பன்னீர் செல்வம் அதிமுக இரட்டை இலை பற்றியும் ஜெயலலிதா, எம் ஜி ஆரை பற்றியும் பேச எந்த தகுதியும் இல்லை - சிவி சண்முகம்
![கரும்புள்ளியாக உள்ள ஓபிஎஸ்; ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை - சி.வி.சண்முகம் Jayalalithaa and MGR are not qualified to talk about ADMK double leaf which is a black spot said CV Shanmugam கரும்புள்ளியாக உள்ள ஓபிஎஸ்; ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை - சி.வி.சண்முகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/829999af10ac0ab7655c5eef476c8e7d1666001146229194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பதவி ஆசையாலும், வெறியாலும் தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்ற போது அதிமுக இயக்கத்தை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு அதிமுக சட்டவிதிகள் மாற்றலாமா என்பது குறித்து பேச அருகதை இல்லை என்றும் சாதாரண அடிப்படை தொண்டனுக்கு உள்ள உரிமை கூட ஓ. பன்னீர் செல்வத்துக்கு இல்லை என மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் 51வது அதிமுக தொடக்கவிழாவினை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் அதிமுகவில் சட்டதிட்டங்களை மாற்றலாமா மாற்றகூடாதா அப்படி மாற்றினால் எம் ஜி ஆரின் ஆன்மா மன்னிக்காது என கூறும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எந்த தகுதியும் தராதரம் இல்லை எனவும்,
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பதவி ஆசையாலும், வெறியாலும் தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்ற போது அதிமுக இயக்கத்தை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு அருகதை இல்லை என்றும் சாதாரன அடிப்படை தொண்டனுக்கு உள்ள உரிமை கூட ஓ. பன்னீர் செல்வத்துக்கு இல்லை என தெரிவித்தார். பாராசக்தியின் வசனத்தை மனப்பாடம் செய்து ஸ்டாலின் புகழை புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் எம் பியான ரவிந்தீரன் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக ஆட்சி சிறப்பாக உள்ளதாக கூறும் இருவருக்கும் அதிமுக பற்றி கூற எந்த தகுதியில்லை இல்லை, எம்ஜி ராமச்சந்திரனால் கொண்டுவரப்பட்ட சட்டவிதியை தன்னுடைய பதவி ஆசை சுயலாபத்திற்காக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து கட்சியிலையே இல்லாத ஒருங்கினைப்பாளர், இணை ஒருங்கினைப்பாளர் பதவியை கொண்டு வந்தவர் ஓ. பன்னீர் செல்வம் எம ஜி ஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் அதிமுக சின்னத்தை முடக்கியவர்களை மன்னிகாது என தெரிவித்தார்.
மேலும், இன்றைக்கு கரும்புள்ளியாக உள்ள ஓ. பன்னீர் செல்வம் அதிமுக இரட்டை இலை பற்றியும் ஜெயலலிதா, எம்ஜிஆரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)