மேலும் அறிய

Air Show, கூட்ட நெரிசலில் இறக்கவில்லை, வெயில் தாக்கத்தால் இறந்துள்ளனர் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

விமானப்படை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் யாரும் இறக்கவில்லை , வெயில் தாக்கத்தினால் மட்டுமே இறந்தனர் - அமைச்சர் மா சுப்பிரமணியன் 

வெயில் தாக்கத்தில் இறந்தனர்

 சென்னை லயோலா கல்லூரியில் காலநிலை மாற்றம் , மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஒரு நாள் கருத்தரங்கிற்கான மலரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ;

சென்னை மேயர் பிரியா கூறும் போது , வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கியுள்ளோம். வடகிழக்கு பருவமழை குறித்து லயோலா கல்லூரி மழைக் காலத்துக்கு முந்தைய நடவடிக்கை குறித்து ஒருநாள் கருத்தரங்கை நடத்துகிறது.

தமிழகத்தில் புயல் , பருவமழைக் காலங்களில் அரசுடன் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மாணவர்களும் சமூக பிரச்சனைகளில் ஒருங்கிணைவது முக்கியத்துவமானது. 

மெரினா விமான சாகசத்தின் போது இறப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறவில்லை. 1932 ல் தொடங்கப்பட்டது இந்திய விமானப்படை , 93 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது , தனது பலத்தை விமானப்படை காட்டுவதற்கு சென்னையை தேர்வு செய்தனர்
தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டம் நடத்தி சேவைத் துறைகளை ஒதுங்கிணைத்தது தமிழ்நாடு அரசு விமானத்துறை கேட்ட அனைத்து வசதியையும் செய்து கொடுத்தோம். 

தயார் நிலையில் மருத்துவமனை 

இந்திய ராணுவத்தின் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பிலும்  பல்வேறு மருத்துவக் குழுக்கள் மெரினாவில் இருந்தனர். அவசர உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் மெரினாவில் தயார் நிலையில் இருந்தன. ஆயிரக்கணக்கான பாரா மெடிக்கல் குழுவினர் பணியில் இருந்தனர்..

அரசு மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்குமாறு விமானப் படை கூறியிருந்தது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி. ஓமந்தூராரர் மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை என  4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருந்தன. போதுமான ரத்தம் தயார் நிலையில் இருந்தது , 65 மருத்துவர்கள் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்தனர்.

அரசியல் செய்ய நினைத்தால் தோற்று போய் விடுவர்

விமானப்படை சாகச நிகழ்ச்சியில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.  வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் குடை , தண்ணீர் எடுத்து வருமாறும்  , கண்ணாடி , தொப்பி அணிந்து வருமாறு விமானப் படை கூறியிருந்தது. வெயிலே இருக்காது எல்லோரும் வாருங்கள் என விமானப் படை கூறவில்லை , வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றே கூறியிருந்தனர்.

மெரினா விமானப் படை சாகசத்தின் போது இறப்பு ஏற்பட்டது வருத்தத்திற்குரியது. இறந்தோருக்கு அனுதாபம் தெரிவித்து கொள்கிறோம் , இதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் தோற்று போய் விடுவர். 

உயிரிழந்த 5 நபர்களும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பலனின்றி யாரும் இறக்கவில்லை. 5 மரணமும் வெயிலின் தாக்கத்தாலே ஏற்பட்டது.  வெயிலின் தாக்கத்தால் நேற்று 102 பேர் பாதிப்பு , மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

15 லட்சம் பேரும் மெரினா முழுவதும் மட்டுமிருந்து பார்க்கவில்லை , வான் எல்லை தெரியும் பல இடங்களில் இருந்தும் பார்த்துள்ளனர். கால் முறிவு , மூச்சுத் திணறல் , குடலிறக்கம் , செரிமான கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 7 பேர்  சிகிச்சை பெறுகின்றனர்,

குடும்பத்தினருக்கு இழப்பீடா ?

பொது மக்களுக்கு தேவையான அனைத்தை வசதிகளையும் அரசு செய்திருந்தது. மெரினாவுக்கே வராத ,   பூதக் கண்ணாடி வைத்து குறை சொல்லும் சில நக்கீரர்கள் தான் அரசை குறை சொல்கின்றனர். தட்ப வெப்ப நிலையை பொறுத்து விமான சாகச நேரத்தை விமானப் படைதான் முடிவு செய்திருந்தது.  விமானப் படையை குறை கூற முடியாது. வெயிலின் தாக்கம் தான் பாதிப்புகளுக்கு காரணம். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை. 

இறந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். 15 லட்சம் பேர் கூடினாலும் சிறிய நெரிசல் கூட ஏற்படவில்லை . இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும்.  5 பேர் இறந்ததற்கு வெயில்தான் காரணம் என்று கூறிய பிறகும் அதையே கேட்டு  குளிர்காய நினைக்க கூடாது. 

15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும். 7, 500 காவலர்கள் பணியில் இருந்தனர்.  விநாயகர் சதுர்த்திக்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை விட குறைவான காவலர்களே நேற்று பணியில் இருந்தது ஏன்? என கேட்கிறீர்கள். வடநாட்டு ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல்களை எல்லாம் குறிப்பிட்டு சொல்லி நான் லாலி.. லாவணி.. பாட விரும்பவில்லை. கனிமொழி கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து அவரிடமே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் . 

சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா கூறும்போது ,  சென்னை மாநகராட்சி சார்பில் நான் 4 மணிவரை மெரினா பகுதியில் பணியில் இருந்தேன். அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்திருந்தது. மாநகராட்சி சார்பில் போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தி இருந்தோம். ஆனால் மதியம் ஒரு மணி உச்சிவெயில் என்பதால் 15 லட்சம் பேர் வந்ததால் மயக்கமடைந்துள்ளனர் . மாநகராட்சி சார்பில் கடற்கரையில் இருந்த கடைகளை அகற்றி பேரிகார்ட் அமைத்தோம்  என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்ததை யாரும் அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சு
Breaking News LIVE 7 Oct : வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்ததை யாரும் அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்ததை யாரும் அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சு
Breaking News LIVE 7 Oct : வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்ததை யாரும் அரசியலாக்க வேண்டாம் - அமைச்சர் மா.சு
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Embed widget