மேலும் அறிய

இபிஎஸ் மீது போடப்பட்ட பொய் வழக்கை தமிழக அரசு வாபஸ்  பெறவில்லை என்றால்...-ஓ.எஸ்.மணியன் அதிரடி

சட்டத்தை எவ்வாறு வேண்டுமானாலும் வளைக்கலாம் என்ற தமிழக அரசின் எண்ணத்திற்கு பாதகமே வந்து சேரும்.

சட்டமன்றம் கூடும் முன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை தமிழக அரசு வாபஸ்  பெறவில்லை என்றால், சட்டமன்றத்தில் அதற்கான தீர்வு காண முயல்வோம் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்வரன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை வீடியோ எடுத்து பேஸ்புக் லைவ் செய்த ராஜேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பாதுகாவலர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து அதிமுகவினர் தாக்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்த நிலையில் சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பு மீதும் மதுரை மாநகர காவல் துறை வழக்கு பதிவு செய்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் பாதுகாவுலர் கிருஷ்ணன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் மற்றும் அடையாளம் தெரியாத அதிமுக நபர் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தனர் இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது காவல்துறையினர் வழக்கு செய்ததை கண்டித்து  நாகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவுரித்திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஓ எஸ் மணியன், ஜீவானந்தம், ஜெயபால், உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட அதிமுக வினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற கோரியும், பாதுகாவலர் மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்த காவல் துறையை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் கூறிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், “சட்டத்தை எவ்வாறு வேண்டுமானாலும் வளைக்கலாம் என்ற தமிழக அரசின் எண்ணத்திற்கு பாதகமே வந்து சேரும் என்றும், சட்டமன்றம் கூடும் முன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் ஓ எஸ். மணியன் அவ்வாறு தமிழக அரசு திரும்ப பெறவில்லை என்றால் சட்டமன்றத்தில் அதற்கான தீர்வு காண முயல்வோம்” என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget