மேலும் அறிய

Guest lecturers Issue: கவுரவ விரிவுரையாளர் பிரச்னை.. அவங்கள கூப்பிட்டு பேசுங்க.. பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை..!

Ramadoss Statement: கவுரவ விரிவுரையாளர்களின் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 4083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 1500 கவுரவ விரிவுரையாளர்களும் உள்ளனர். கவுரவ விரிவுரையாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.10,000 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்பட்டது. பின்னர் அது ரூ.15 ஆயிரமாகவும், நடப்பாண்டின் தொடக்கத்திலிருந்து ரூ.20,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அலைக்கழிக்கப்படுவதாக குற்றசாட்டு 

முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊதியம், அமைப்பு சாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகவும் குறைவு ஆகும். அதிலும் ஆண்டு முழுவதும் பணியாற்றினாலும் கூட 11 மாதங்களுக்கு மட்டும் தான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அதுவும் கூட பல நேரங்களில் 5 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாமல் அவர்கள் அரசால் அலைக்கழிக்கப்படும் கொடுமைகளும் நடக்கும்.

கவுரவ விரிவுரையாளர் என அழைக்கப்பட்டாலும் கவுரவமற்றவர்களாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். கவுரவ விரிவுரையாளர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான ஊதியம் என்பது அவர்களின் தகுதிக்கும், அனுபவத்திற்கும் பொருத்தமானதாக இல்லை. கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,000 ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைகழக மானியக்குழு ஆணையிட்டிருக்கிறது.

ஆனால், ஹரியானாவைத் தவிர எந்த மாநிலமும் இதை மதித்து செயல்படுத்தவில்லை. கர்நாடகத்தில் மாத ஊதியமாக ரூ.32,000 வழங்கப்படுகிறது. சம வேலைக்கு  சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இருந்தாலும் கூட, அதை எந்த அரசும் செயல்படுத்துவதில்லை; இன்னும் கேட்டால் அரசுகளே அத்தீர்ப்பை அவமதிக்கின்றன.

40 வயதை கடந்த விரிவுரையாளர்கள்: 

கவுரவ விரிவுரையாளர்களில் பெரும்பான்மையினர் 45, 50 வயதைக் கடந்து விட்டனர். இதன்பிறகு அவர்கள் வேறு பணிக்கு செல்வதோ, பொதுவான விதிகளின் கீழ் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதோ சாத்தியமில்லை. அதனால் தான் அவர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிய காலத்தையும், அவர்களின் கல்வித்தகுதியையும் கொண்டு அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.

வாக்குறுதி அளித்த அமைச்சர் பொன்முடி 

முந்தைய ஆட்சியின் நிறைவில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் நோக்குடன், 2021 பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்குகளால் அது சாத்தியமாகவில்லை. புதிய அரசு பதவியேற்ற பிறகும் கூட கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், பல மாதங்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இத்தகைய சூழலில் தான் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களுக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்; பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7&ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், அரசுத் தரப்பிலிருந்து  எவரும் அவர்களை சந்தித்து பேசவில்லை. மாறாக,  அவர்களை அச்சுறுத்தி போராட்டத்தை திரும்பப் பெறச் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அழைத்து பேச வேண்டும் 

ஆசிரியர்கள் மரியாதைக்குரியவர்கள். அவர்கள் தங்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கோரி போராடும் நிலையை அரசு ஏற்படுத்தக்கூடாது. கவுரவ விரிவுரையாளர்களை அழைத்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்த வேண்டும். பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் சாத்தியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget