மேலும் அறிய

Prashant Kishor: ‘காங்கிரஸ் 2.0' - காங்கிரஸில் இணைய இருக்கும் பிரஷாந்த் கிஷோரின் திட்டம் என்ன?

தற்போது இருக்கும் காங்கிரஸை சீரமைத்து புதிதாக ஒரு காங்கிரஸை உருவாக்குவதை தான் காங்கிரஸ் 2.0 என்று பிரசாந்த் கிஷோர் குறிப்பிடுகிறார் என்று கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். 

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது ஏறக்குறைய முடிவாகிவிட்ட நிலையில், கட்சியில் இணைவது மட்டுமே மீதமிருப்பதாகவும், சில நாட்களில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சோனியாகாந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் சோனியா காந்தியை சந்திக்கிறார் பிரசாந்த் கிஷோர். அவர் 2024 தேர்தலில் எப்படி வெல்வது என்பது பற்றிய 600 பக்கங்கள் கொண்ட பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஷோவை காட்டியிருக்கிறார்.

இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ்  செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ள விசயங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தனித்தும், தமிழ்நாசு, மேற்குவங்கம் மற்றும் மகாராஸ்ட்ராவில் கூட்டணி வைத்தும் போட்டியிட வலியுறுத்தியுள்ளார். இதற்கு ராகுல்காந்தியும் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Prashant Kishor: ‘காங்கிரஸ் 2.0' - காங்கிரஸில் இணைய இருக்கும் பிரஷாந்த் கிஷோரின் திட்டம் என்ன?

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே இருக்கவேண்டும் என்று கூறியுள்ள அவர், துணைத்தலைவராகவோ அல்லது செயல்தலைவராகவோ காந்தி குடும்பத்தைச் சாராத வேறு ஒருவருக்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். கீழ்மட்ட அளவில் இறங்கி வேலை பார்க்க காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் , தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப வேலை செய்ய தேவை என்ற காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். அதோடு, ராகுல்காந்தியை நாடாளுமன்ற குழுத்தலைவராக நியமிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். 

இவைகள் எல்லாம் கட்சியில் செய்யவேண்டிய 5 முக்கிய விஷயங்களில் ஒன்று என்று என்றும், கூட்டணியை முடிவு செய்வது, கட்சியின் கொள்கைகளை மீட்டெடுப்பது, கீழ்மட்ட அளவில் இறங்கி வேலை பார்க்கும் தலைவர்களை உருவாக்குவது, ஊடகம் மற்றும் சமூகவலைதள பிரச்சாரத்திற்கான ஒரு அமைப்பை உருவாக்குவது ஆகியவை மீதி திட்டங்கள் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தற்போது இருக்கும் காங்கிரஸை சீரமைத்து புதிதாக ஒரு காங்கிரஸை உருவாக்குவதை தான் காங்கிரஸ் 2.0 என்று பிரசாந்த் கிஷோர் குறிப்பிடுகிறார் என்று கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். 

Prashant Kishor: ‘காங்கிரஸ் 2.0' - காங்கிரஸில் இணைய இருக்கும் பிரஷாந்த் கிஷோரின் திட்டம் என்ன?

கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை பாதுகாப்பது, உரிமை கொண்டாடுவது மற்றும் முகஸ்துதிக்களை உடைப்பது, கூட்டணி பிரச்சனைகளை சரிசெய்வது, வாரிசு அரசியலை ஒழிக்க குடும்பத்தில் ஒருவருக்கு தான் வாய்ப்பு என்ற நிலையை உருவாக்குவது, காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டியின் பதவிகளுக்கு பதவிகாலத்தை நிர்ணயம் செய்வது, 15000 தலைவர்களை கண்டறிவது, 1 கோடி தொண்டர்களை இந்தியா முழுவதும் உருவாக்குவது, சமூக ஆர்வலர்கள், இன்ஃப்ளூயசர்கள், மற்றும் மக்களோடு இணைப்பில் இருக்கக்கூடிய 200க்கும் மேற்பட்டவர்களைக் கண்டறிந்து பயன்படுத்துவது ஆகியவை காங்கிரஸ் செய்யவேண்டிய முக்கிய மாற்றங்கள் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவைகள் எல்லாம் கடந்த ஆண்டு காங்கிரஸ், பிரசாந்த் கிஷோர் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரசாந்த் கிஷோரால் கூறப்பட்டவை என்றும் இந்த ஆண்டு கொடுத்துள்ள வியூகங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று தகவல்வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget