மேலும் அறிய

“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!

”பிரதமராக இருந்த வாஜ்பாய் என்னுடைய தொலைபேசியை உடனே எடுத்து வாழ்த்துச் சொன்னார். ஆனால், சோனியா காந்தி அப்படி எதுவும் செய்யவில்லை”

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தன்னை ஒரு மணி நேரம் காக்க வைத்ததாக  முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்தவரே சோனியா குறித்து சரமாரி புகார்

காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களவை துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்து அந்த கட்சியின் முக்கிய உறுப்பினராக செயல்பட்ட நஜ்மா ஹெப்துல்லாதான் சோனியா காந்தியை நோக்கி இந்த புகாரை தெரிவித்துள்ளார். தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்
நஜ்மா

 

எதற்காக காக்க வைத்தார் சோனியா ?

நாடாளுமன்றங்களுக்கு இடையிலான யூனியனின் தலைவராக  1999ஆம் ஆண்டு தான் தேர்வான செய்தியை தெரிவிக்க, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும், அவரோ தன்னை தொலைபேசியிலேயே ஒரு மணி நேரம் காக்க வைத்தார் என்றும் நஜ்மா தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிடுள்ளார்.

சோனியாவுடன் மோதல், கட்சியை விட்டுச் சென்ற நஜ்மா

சோனியாகாந்தியுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடு, மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, ஒரு கட்டத்தில் பாஜகவில் இணைந்தார் நஜ்மா, அவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தப்போது, சிறுபான்மையினர் விவ்காரத்துறை அமைச்சராக பதவி கொடுத்தது பாஜக, பின்னர் மணிப்பூர் மாநில ஆளுநராகவும் நஜ்மா செயல்பட பாஜக வாய்ப்பு வழங்கியது.

நஜ்மா சொல்வது என்ன ?

தன்னுடைய சுயசரிதையான ‘இன் பர்ஸ்யூட் ஆஃப் டெமாக்கிரசி ; பியாண்ட் பார்ட்டி லைன்ஸ்’ என்ற புத்தகத்தில், பல்வேறு பிரச்னைகள் குறித்து குறிப்பிட்டுள்ள நஜ்மா, சோனியா காந்தியுடன் ஏன் கருத்து மோதல் ஏற்பட்டது ? தான் ஏன் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக நேர்ந்தது என்பதையெல்லாம் விரிவாக நஜ்மா எழுதியுள்ளார். அதோடு, கடந்தச் 1999ஆம் ஆண்டு, ஐ.பி.யு எனப்படும் சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான யூனியன் தலைவராக தான் தேர்வானது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும், இது இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கிய அவரது பயணத்தில் ஒரு மைல் கல் என்றும் நஜ்மா குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு பெரிய மனது - நஜ்மா

மேலும், இந்த தகவலை தெரிவிக்க ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பெர்லினில் இருந்து தொலைபேசி மூலம் அப்போதைய பிரதமர் வாஜ்பேயை தான் தொடர்புகொண்டதாகவும், அவர் உடண்டியாக அழைப்பை ஏற்று, தன்னை பாராட்டியதுடன், தான் இந்தியா வந்ததும் இதனை கொண்டாடுவோம் என்று பெரிய மனதோடு சொன்னதோடு, மத்திய இணையமைச்சராக இருந்த என்னை கேபினட் அந்தஸ்க்கு வாஜ்பாய் உயர்த்தினார் என்று நஜ்மா தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் சோனியாகாந்திக்கு மரியாதை நிமித்தமாக இந்த செய்தியை தெரிவிக்க அழைத்தபோது, மேடம் பிசியாக இருப்பதாகவும் அவர் தன்னை காத்திருக்க சொன்னதாகவும் கூறி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொலைபேசியிலேயே தன்னை அவருடைய உதவியாளர்கள் காக்க வைத்ததாக நஜ்மா குறிப்பிட்டுள்ளது தேசிய அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதற்கு சோனியா காந்தி தரப்பில் இருந்து விரைவில் இந்த குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி பதில் தரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget