அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பு
Annamalai: தமிழ்நாடு பாஜகவின் தலைவராக பதவி வகித்த அண்ணாமலைக்கு கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இன்று, தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கும் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். தேர்தல் பணி மற்றும் கட்சி பணிகளில் பொதுக்குழு அதிக பங்குவகிக்கும் என தகவல் தெரிவிக்கின்றன.
Also Read: வாட் ப்ரோ! பாஜகவில் நேற்று ஒரு ரூல், இன்று ஒரு ரூலா…ஆனால் நயினார் நாகேந்திரன் ஹேப்பி!
தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்பு விழாவில் பேசிய அண்ணாமலை, இதற்கு முன்பு, தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற பொறுப்பு எனக்கு இருந்தது. இனி சுதந்திரமாக கருத்துகளை தெரிவிப்பேன். இனிமேல், அண்ணாமலையாக கருத்துகளை தெரிவிப்பேன். எப்போதும் அடிச்சு ஆடிய வேண்டிய, பாக்சிங் கலை, ஒரு அரசியல்வாதிக்கு தேவைப்படுது. இனி பேச்சு ஸ்டைலை மாத்திருவேன். பக்குவமாக பேச, நயினார் நாகேந்திரன் இருக்கிறார். இனி கூட்டணி குறித்து கேள்விக்கு எல்லாம் நயினார் அண்ணனிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என சொல்லிவிடுவேன். இனி நம்ம பாலை மட்டும் அடித்தால் போதும்; பவுன்சர் உள்ளிட்ட கஸ்டமான பாலை நயினார் நாகேந்திரன் பார்த்துக் கொள்வார். இனி சிக்ஸ் அடிப்பதுதான் என் வேலை என அண்ணாமலை பேசியிருக்கிறார்.
Also Read: Ponmudi: மிரட்டிவிட்ட ஸ்டாலின்: உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட பொன்முடி!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

